செய்திகள் :

''இதுவொரு முக்கியமான மைல்கல்" - பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை தொடங்க திட்டம்!

post image

பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ பாதைதான் சென்னையில் முதல் இரட்டை அடுக்கு மேம்பால மெட்ரோ வழித்தடம்.

போரூர், காரம்பாக்கம், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய ஐந்து மெட்ரோ நிலையங்கள் இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.

போரூர் - வடபழனி வழித்தடத்தில் சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று காலை சோதனை ஓட்டத்தை நடத்தியது.

சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ

டவுன் லைனில் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தியவர்கள் கூடிய விரைவில் இதேபோல அப் லைனிலும் சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள்.

சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, அந்த வழித்தடம் திறக்கப்படும் தேதி குறித்து சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அவர், "இன்று சோதனை ஓட்டம் நடத்தினோம். அது வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இதுவொரு முக்கியமான மைல்கல்.

கடந்த ஜூன் மாதத்தில் பூந்தமல்லியிலிருந்து போரூர் வரை சோதனை ஓட்டம் நடத்தினோம். அதன் வேலைகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரை மெட்ரோ இருந்தால்தான் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வடபழனி மெட்ரோவிலிருந்து போரூர் செல்லும் வழித்தடத்திற்கு லிங்க் பிரிட்ஜ் அமைத்திருக்கிறோம்.

மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக்
மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக்

கடந்த நான்கு மாதங்களாக போரூர் - வடபழனி வழித்தடத்தின் மின்சாரம், டிராக் ஆகியவற்றுக்காக எங்களின் சி.எம்.ஆர்.எல் ஊழியர்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம்.

இந்த மாத முடிவிற்குள் முழுமையான வேகத்தில் சோதனை நடத்தவிருக்கிறோம். வேகத்திற்கான சான்றிதழ், வழித்தடத்தின் ஆய்வு கூடிய விரைவில் நடைபெறும்.

பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையே சேவை தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரையிலான பாதையின் பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்." எனக் கூறினார்.

சத்தியமங்கலம்: 42 தனியார் விடுதிகளுக்கு சீல்; வருவாய்த்துறையினர் நடவடிக்கை - பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தனியார் தங்கும் விடுதிகள் செயல்படுவதாகவும், இதன் காரணமாக சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகவும் ஒல... மேலும் பார்க்க

``மதுரைக்கு ரூ.4,000; நெல்லைக்கு ரூ.4,500: ஆம்னிப் பேருந்துகளின் கட்டணக் கொள்ளை" - அன்புமணி காட்டம்!

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட கொண்டாட்ட தினங்களில் நகரத்தில் வசிப்போர் அவரவரின் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அதற்காக பேருந்துகளும், ரயில்களும் கூட்ட நெரிசலால் அலைமோதும். ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட... மேலும் பார்க்க

"காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம்; அதைத் திமுகதான் எதிர்த்ததாம்!" - திருச்சி வேலுசாமி காட்டம்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி 'பராசக்தி' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். அப்படத்தில் காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம், அதைத் திமுகத... மேலும் பார்க்க

RBI: அமெரிக்காவை நம்பாத இந்தியா; தங்கம் பக்கம் ரூட்டை மாற்றுவது ஏன்?

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி... அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி... தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு... என நம்மை சுற்றி பல பொருளாதார விஷயங்களும், மாற்றங்களும் நடந... மேலும் பார்க்க

உமர் காலித்: ``பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல" - மம்தானிக்கு அதிருப்தி தெரிவித்த இந்தியா!

டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மாணவச் செயற்பாட்டாளரான உமர் காலித்தைச் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) ... மேலும் பார்க்க