செய்திகள் :

'இந்தியா என்னை 100% நம்பலாம்; நான் மோடியின் மிகப்பெரிய ஃபேன்!' - சர்ப்ரைஸ் போன்காலில் ட்ரம்ப்

post image

அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ நான்கு நாள் இந்தியப் பயணத்தில் இருக்கிறார்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, டெல்லியில், 'அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை' கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சர்ப்ரைஸாக போன்காலில் கலந்துகொண்டார். அதை தனது எக்ஸ் பக்கத்தில் அமெரிக்காவின் இந்திய தூதர் செர்ஜியோ கோர் பகிர்ந்துள்ளார்.

ட்ரம்ப் அந்த நிகழ்ச்சியில் Live போன்காலில் பேசியதாவது...

"இந்தியாவை எனக்கு அவ்வளவு பிடிக்கும். பிரதமர் மோடி மிகச்சிறந்த மனிதர். அவர் என்னுடைய நல்ல நண்பர்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

செர்ஜியோ ஒரு அற்புதமான மனிதர். இந்தியாவுடன் நாம் இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்ததே இல்லை.

இந்தியாவும், இந்திய மக்களும் என்னையும், எங்களது நாட்டையும் 100 சதவிகிதம் நம்பலாம். அவர்களுக்கு எப்போது, என்ன உதவி தேவையென்றாலும் யாரை அழைக்க வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

நேராக இங்கே எங்களை அழைக்கலாம். நாங்களும் இப்போது மிகச்சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். புதிய சாதனைகளைப் படைத்து வருகிறோம்.

நம்முடைய பொருளாதாரம், பங்குச்சந்தை என எல்லாமே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவுக்கு என்ன தேவையென்றாலும், எங்களிடம் கேட்கலாம். சொல்லப்போனால் நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஃபேன்.

மார்கோ ஒரு மிகச்சிறந்த மனிதர். அமெரிக்க வரலாற்றிலேயே மிகச்சிறந்த வெளியுறவுத்துறைச் செயலாளராக அவர் பேசப்படுவார். மார்கோ நம்முடன் இருக்கும்போது, நமக்கு எல்லாமே பிரம்மாண்டமாகத்தான் நடக்கும்". என்றிருக்கிறார்.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க