செய்திகள் :

இந்தியா முழுவதும் விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் போராடுவது ஏன்? 6 புள்ளிகள்|Quick Points

post image

இன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இது நாடு முழுவதுமே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கான காரணத்தை 6 புள்ளிகளில் தெரிந்துகொள்ளலாம்... வாங்க...

> இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தில், பல அமெரிக்க விவசாய மற்றும் பால் பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது... வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது இந்திய விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும்.

இதனால், இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள விவசாயம் மற்றும் பால் பொருள்கள் குறித்த அறிவிப்புகளை ரத்து செய்ய வேண்டும்.

விவசாயம்
விவசாயம்

> 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய தொழிலாளர் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முன்பிருந்த 29 சட்டங்கள் 4 சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தினால் தொழிலாளர்களின் பாதுகாப்பு பாதிக்கப்படலாம். மேலும், நிறுவனங்கள் எளிதாக தொழிலாளர்களை வேலையில் அமர்த்துவதும்... நீக்குவதும் நடக்கும். கூடவே, தொழில்கள் கான்ட்ராக்ட் அடிப்படையில் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

இதனால், இந்தத் திருத்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்களின் கோரிக்கை வைக்கின்றன.

கூடுதலாக...

> மின்சாரத் திருத்தச் சட்டம் மற்றும் வரைவு விதை சட்டம் திரும்பப் பெற வேண்டும்.

விவசாயிகளின் உயிர்நாடிகளில் ஒன்று, மின்சாரம். விவசாயத்தில் அதிக வருமானம் கிடைக்கவில்லை என்றாலும் இலவச மின்சாரம் விவசாயிகளின் செலவை ஓரளவு குறைக்கிறது.

இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்சாரத் திருத்தச் சட்டம் இலவச மின்சாரத்தை ரத்து செய்யலாம்.

தொழில்
தொழில்

வரைவு விதை மசோதா கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் என்று விவசாயிகள் இந்த இரு மசோதாகளையும் எதிர்க்கின்றனர்.

> பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

> 100 நாள் வேலைத் திட்டத்திற்கு முன்பு இருந்த 90 - 10 நிதி பகிர்தலையே மீண்டும் கொண்டு வர வேண்டும்.

> விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி மிஷன் (கிராமின்) மற்றும் சாந்தி சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும்.

ஐஜேகே 4-வது மாநில மாநாடு! - வேப்பூரில் திரண்ட தொண்டர்கள்!

இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) நான்காவது மாநில மாநாடு, கடலூர் மாவட்டம் வேப்பூரில் பிப்ரவரி 8 அன்று கட்சியின் நிறுவனர் Dr. T.R. பாரிவேந்தர் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. செங்கோட்டை மற்றும் தலைமை... மேலும் பார்க்க

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? - கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி நியமன ஆணை வழங்க இருந்த நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது`தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செவி... மேலும் பார்க்க

`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' - நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் வியாழக்கிழமை 'தனி நபர் தீர்மானம்' (Substantive Motion) ஒன்றை தாக்கல் ச... மேலும் பார்க்க

`டிடிவி-க்கு சித்தியின் மீது குறையாத கோபம்' - சசிகலாவின் `திடீர்' ஆதரவாளர்கள் சந்திப்பு ஏன்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தன் இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்து, 2026 தேர்தலில் களமிறங்குவது குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஜெயலலிதா நினைவுநாளான பிப்ரவரி 24-ம... மேலும் பார்க்க

பழனி முருகன் கோயிலில் ஒலித்த 'உங்க விஜய்' பாடல்; இளைஞர் அட்ராசிட்டி - போலீஸில் புகார்!

பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு எளிதாகச் செல்வதற்கு யானை பாதையைத்தான் பயன்படுத்துவார்... மேலும் பார்க்க

'96 க்குப் பின் ஒற்றை இலக்க வாக்கு வங்கி மட்டுமே!' - தமிழகத்தில் காங்கிரஸின் பலம்தான் என்ன?

திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக புகைய தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவில்லை. 'அமைச்சரவையில் பங்கு கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன பிறகும் காங்கிரஸார் விடுவதாக இல்லை... மேலும் பார்க்க