செய்திகள் :

ஐஜேகே 4-வது மாநில மாநாடு! - வேப்பூரில் திரண்ட தொண்டர்கள்!

post image

இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) நான்காவது மாநில மாநாடு, கடலூர் மாவட்டம் வேப்பூரில் பிப்ரவரி 8 அன்று கட்சியின் நிறுவனர் Dr. T.R. பாரிவேந்தர் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. செங்கோட்டை மற்றும் தலைமைச் செயலக வடிவிலான மேடை அமைப்புகள் மாநாட்டிற்குப் பெருமை சேர்த்தன.

மாநாட்டுத் தொடக்கம்

மாநாட்டை ஐஜேகே தலைவர் இளையவேந்தர் Dr. ரவி பச்சமுத்து 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றித் தொடங்கி வைத்தார். AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் தொண்டர்களை உற்சாகப்படுத்தின.

நிறைவேற்றப்பட்ட 11 முக்கிய தீர்மானங்கள்:

  1. ஊழல் மலிந்த திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்தல்.

  2. வரும் தேர்தலில் மோடி - இபிஎஸ் தலைமையிலான ஆட்சி அமையப் பாடுபடுதல்.

  3. 'மைனாரிட்டி' என்ற சொல்லுக்குப் பதிலாகச் சட்டத் திருத்தம் கொண்டு வருதல்.

  4. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குதல்.

  5. விருத்தாசலத்தைத் தனி மாவட்டமாக அறிவித்தல்.

  6. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.

  7. கச்சத்தீவை மீட்டு மீனவர் வாழ்வாதாரத்தைக் காத்தல்.

  8. பி.சி.ஆர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தில் சீர்திருத்தம் செய்தல்.

  9. ஒவ்வொரு மாவட்டத்திலும் PM SHRI பள்ளிகளை அமைத்தல்.

  10. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுதல்.

  11. ஒவ்வொரு ஒன்றியத்திலும் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களைத் திறத்தல்.

தலைவர்களின் எழுச்சியுரை:

Dr. ரவி பச்சமுத்து தனது உரையில், பெண்கள் அரசியலில் ஈடுபடுவதன் அவசியத்தையும், பிரதமர் மோடியின் உலகளாவிய பொருளாதாரக் கொள்கைகளையும் விளக்கினார். 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்த அன்புமணி ராமதாஸ் போன்ற தலைவர்களின் பங்களிப்பையும் அவர் நினைவு கூர்ந்தார்.

சிறப்புரையாற்றிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "வள்ளலாகவும் அரசனாகவும் திகழும் பாரிவேந்தர், விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை ஆள வேண்டும் என விரும்புகிறார். இந்த மாநாட்டுக் கூட்டமே ஆட்சி மாற்றத்திற்குச் சாட்சி" என்றார்.

நிறைவுரை ஆற்றிய Dr. T.R. பாரிவேந்தர்:

"பதவிக்காக அன்றி, ஏழைகளுக்கு உதவவே அரசியலுக்கு வந்தேன். கடந்த 10 ஆண்டுகளில் கல்வி மற்றும் மருத்துவத்திற்காக 650 கோடி ரூபாய் செலவிட்டுள்ளேன். 36,000 மாணவர்கள் என் மூலம் கல்வி பெற்றுள்ளனர். இலவசங்களுக்கு ஆசைப்படாமல், தன்மானத்துடன் வாழ மக்கள் முன்வர வேண்டும். ஊழலற்ற, பண்புள்ள அரசியலே ஐஜேகே-வின் அடையாளம்" என முழங்கினார்.

அதிமுக நிர்வாகிகள் அருண்மொழித்தேவன், குமரகுரு, தாமரை ராஜேந்திரன் மற்றும் ஐஜேகே நிர்வாகிகள் ஜி. ராஜன், சண்முகம் உள்ளிட்ட பலர் இம்மாநாட்டில் பங்கேற்றனர். இம்மாநாடு ஐஜேகே-வின் கட்டுக்கோப்பையும், தமிழக அரசியலில் அதன் முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது, என்கிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகள். 

சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்; அல்லாடும் பெற்றோர்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் - வினோதா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெறமுடியாமல் போராடி வருக... மேலும் பார்க்க

`டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்துட்டுப் போகட்டுமே' - சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தும் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெர... மேலும் பார்க்க

'காங்கிரஸின் தவறு தான் அது'; சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் - 2006 தேர்தலில் நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வ... மேலும் பார்க்க

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? - கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி நியமன ஆணை வழங்க இருந்த நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது`தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செவி... மேலும் பார்க்க

`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' - நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் வியாழக்கிழமை 'தனி நபர் தீர்மானம்' (Substantive Motion) ஒன்றை தாக்கல் ச... மேலும் பார்க்க

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; காவல்துறையினர்மீது நான்கு பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த 2025 ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28ஆம் தே... மேலும் பார்க்க