செய்திகள் :

`மனைவி அந்த கேள்வியை கேட்டதும் சங்கடமா போச்சு'- நெல்லை புத்தக திருவிழா புறக்கணிப்பு குறித்து திவான்

post image

திருநெல்வேலியில் தமிழக அரசு சார்பில் பொருநைப் புத்தகத் திருவிழா கண்காட்சி இரு தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

125க்கும் பேற்பட்ட பதிப்பகங்கள் தங்களது புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளன. பிப்ரவரி 22ம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்தச் சூழலில், எழுத்து, வாசிப்புடன் தொடர்புடைய இந்த மாபெரும் விழாவில், திருநெல்வேலியில் வசித்து வரும் 70 வயதைக் கடந்த எழுத்தாளர், வாழும் காலத்திலேயே புத்தகங்கள் அரசுடமையாக்கப்பட்ட புகழுக்குரியவர், வரலாற்று ஆய்வாளர், 190 புத்தகங்கள் வரை எழுதியிருப்பவர், மிசா காலத்தில் சிறைவாசம் சென்றவர் எனப் பல பெருமைகளைப் பெற்ற செ.திவானின் பெயர் இந்தப் புத்தக் கண்காட்சிக்கான அழைப்பிதழலில் இடம் பெறவில்லை என்பதுடன்... அவருக்கு அழைப்பிதழே வழங்கப்படவில்லை என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.

சமூக ஊடகங்களில் இது தொடர்பாகப் பலர் ஆதங்கத்தைத் தெரிவித்து வர, திவானிடமே பேசினோம்.

எழுத்தாளர் செ.திவான்

''தொடங்கின முதல் நாள் போய் மூவாயிரம் ரூபாய் வரைக்கும் புத்தகங்கள் வாங்கி வந்தேன். அதுக்கடுத்த நாள் ரெண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். என்பாட்டுக்குப் பதிப்பகங்களின் அரங்கங்களுக்குப் போய் புத்தகங்களை வாங்கிட்டு வந்துட்டேன். அங்க கையில ஒருத்தர் அழைப்பிதழ் வச்சிருந்தார். வாங்கிப் பார்த்தேன். நூறு நூத்தம்பது பேருக்கு மேல விருந்தினர்கள், அழைப்பாளர்கள்னு பெயர் போட்டிருந்தது. திருநெல்வேலியைச் சேர்ந்தவங்கிற அந்த ஒரு காரணத்துலயாச்சும் எங்காவது ஒரு மூலையில என் பெயரையும் போட்டிருக்கலாம். ரொம்ப வருத்தமா இருந்தது.

நான் செல்போன் வச்சிக்கிடுறதில்ல. சமூக ஊடகங்களிலும் இல்ல. ஆனா என்னுடைய நண்பர்கள் சிலர்தான் இதுபத்தி எங்கிட்ட தங்களது வருத்தங்களைப் பதிவுசெய்தாங்க.

இன்னைக்கும் என் வீட்டுல இப்ப சுமார் ரெண்டு லட்சம் புத்தகங்கள் இருக்கு. என் வேலை எழுதறது, புத்தகம் வாசிக்கறது. இன்னைக்கு நேத்தா செய்றேன்.

வருத்தத்தை வெளியில காட்டிக்காம பேசாம வீட்டுக்கு வந்தேன். ஆனா வீட்டுல என் மனைவியே அதைக் கேட்டுட்டாங்க. அப்ப ரொம்ப கஷ்டமாயிடுச்சு.

எழுத்தாளன், மனைவி பிள்ளைகளுக்குப் பெரிசா சொத்து சுகம் சேர்த்து வைக்கிறதுல்ல. அவனுக்கு ஓர் அங்கீகாரம் கிடைச்சாலே அது அந்த குடும்பத்துக்குப் பெரிய சந்தோஷம். 'அழைப்பிதழில் பெயர் இல்லையேனு எதுக்கு நினைச்சுகிட்டு, அழைப்பிதழ்கூட இல்லையே'னு நினைச்சப்பதான் உடனே முதல்வருக்கும் பள்ளிக் கல்வி அமைச்சருக்கும் என் ஆதங்கத்தை தெரியப் படுத்தணும்னு நினைச்சேன்.

உடனே ஒரு கடிதம் அனுப்பிட்டேன்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மூணு மாவட்டங்களிலும் சேர்ந்து இதுவரை 25 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டிருக்கு. அதுல 24 பேர் நூல்கள் அவர்களுடைய இறப்புக்குப் பிறகு ஆக்கினாங்க. எனக்கு மட்டும்தான் நான் உயிரோடு இருக்கிறப்பவே நடந்தது. 2022 ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின்தான் அந்தப் பெருமையைத் தந்தது. அப்படியிருக்கும்போது அந்த ஒரே ஆளான என்னை, நான் இதே திருநெல்வேலியில இன்னைக்கும் 72 வயசுலயும் எழுதிட்டிருக்கிற சூழல்ல எப்படி மறந்தாங்கன்னு தெரியலை, இது எனக்கு ரொம்பவே மனசுக்கு கஷ்டமா இருக்கு. `எழுத்தாளர்கள் மீது தனிப்பிரியம் கொண்ட கலைஞர் வழி நடக்கும் அரசு இந்த மாதிரி கவனமின்மையை எப்படி அனுமதிக்கலாம்'ன்னு கடிதத்தில் தெரிவிச்சிருக்கேன்.

என்னுடைய ஆதங்கத்தைக் கொட்டிட்டேன், அவ்வளவுதான்" என்கிறார் திவான்.

Aazhikondaan: 'ராஜேந்திர சோழனின் சாதனைகள் இனி ஆங்கிலத்தில்' - 16 வயது மாணவர் எழுதிய வரலாற்று நாவல்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில், ரௌனக் ஷிவ் (புனைப்பெயர்: அந்துவன்) எழுதிய "Aazhikondaan – The Conqueror Of Oceans (Part - 1)" என்ற ஆங்கிலப் புத்தக வெளியீட்டு வி... மேலும் பார்க்க

Book Fair: 20 லட்சம் வாசகர்கள் வருகை; 50 லட்சம் புத்தகங்கள் விற்பனை; சென்னை புத்தகக்காட்சியில் சாதனை

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பாபாசி) சார்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வந்த 49-வது சென்னை புத்தகக் காட்சி நேற்று (புதன்கிழமை) நிறைவடைந்தது.இந்த ஆண்டு 'இ... மேலும் பார்க்க

``மொழிபெயர்ப்பில் உணர்வை கடத்த வேண்டும்.!" - மொழிபெயர்பாளர் அரவிந்தன்

சென்னை 49-வது புத்தக திருவிழாவில் பல எழுத்தாளர்களும் வாசகர்களும் குவிந்து வருகின்றனர். அவ்வகையில் பிரபல மொழிப்பெயர்பாளர் அரவிந்தன் அவர்களை சந்தித்து மொழிபெயர்ப்பின் நுணுக்கங்கள் குறித்து பேசினோம். அப்... மேலும் பார்க்க

Book Fair: "லாரியில‌ கொண்டு போனோம்" - ரூ. 1.5 லட்சத்திற்கு புத்தகங்கள் வாங்கிய பிக்பாஸ் தினேஷ் அம்மா

சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் ஒன்றரை லட்சம் ரூபாய்க்குப் புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளது திருவில்லிபுத்தூரில் இயங்கி வரும் பென்னிங்டன் நூலகம்.ஆங்கிலேயர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இந்த... மேலும் பார்க்க

Book Fair: சென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெறும் அம்பேத்கர் நூல்கள்! - ஒரு பார்வை

நந்தனத்தில் நடந்து வரும் சென்னை 49-வது புத்தகத் திருவிழாவில் அம்பேத்கரை பற்றிய புத்தகங்கள் இளம் வாசகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு புதிதாக வெளிவந்த அம்பேத்கரைப் பற்றிய புத்தகங... மேலும் பார்க்க

`முதலீட்டில் அவசரம் கூடாது' - ஆனந்த் ஸ்ரீனிவாசன் பரிந்துரைக்கும் முதலீடு சார்ந்த புத்தகங்கள்!

சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகத் திருவிழாவில், பங்குச் சந்தை தொடர்பான புத்தகங்கள் வாசகர்களின் கவனத்தை கணிசமான அளவு ஈர்க்கின்றன.முதலீடு குறித்து அடிப்படை புரிதல் பெற விரும்பும் மாணவர்... மேலும் பார்க்க