செய்திகள் :

`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' - நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்

post image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் வியாழக்கிழமை 'தனி நபர் தீர்மானம்' (Substantive Motion) ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த தீர்மானத்தில், `ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதோடு, அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்' என்றும் கோரப்பட்டிருக்கிறது.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ``இந்தியாவை அமெரிக்காவிடம் பிரதமர் மோடி விற்றுவிட்டார். விவசாயிகளுக்கு எதிராக அமெரிக்க பொருள்களுக்கு இந்தியக் கதவை திறந்துவிட்டிருக்கிறார். நாம் எங்கு எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்காதான் முடிவு செய்கிறது. நம் சுயமரியாதையை இழந்து, அடிமையைப் போல அமெரிக்காவிடம் இந்தியா உரையாற்றியிருக்கிறது" எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.

நிஷிகாந்த் துபே
நிஷிகாந்த் துபே

இந்த நிலையில்தான் எம்.பி நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ``நாட்டைப் பலவீனப்படுத்த விரும்பும் ஜார்ஜ் சோரோஸ் போன்ற சக்திகளின் உதவியுடன் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துகிறார்.

இது குறித்து இன்று மக்களவையில் நான் தீர்மானம் தாக்கல் செய்துள்ளேன். ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தகுதியற்றவர். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும்." என்றார்.

இதற்கு முன்பே, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ``ராகுல் காந்தி சபையை தவறாக வழிநடத்தியதற்காகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காகவும் பா.ஜ.க உறுப்பினர்கள் 'அவமதிப்பு நோட்டீஸ்' தாக்கல் செய்வார்கள்" என்று கூறியிருந்தார். ஆனால், எம்.பி நிஷிகாந்த் துபே அதைவிட தீவிரமான 'முதன்மைத் தீர்மானம்' தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்; அல்லாடும் பெற்றோர்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் - வினோதா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெறமுடியாமல் போராடி வருக... மேலும் பார்க்க

`டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்துட்டுப் போகட்டுமே' - சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தும் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெர... மேலும் பார்க்க

'காங்கிரஸின் தவறு தான் அது'; சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் - 2006 தேர்தலில் நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வ... மேலும் பார்க்க

ஐஜேகே 4-வது மாநில மாநாடு! - வேப்பூரில் திரண்ட தொண்டர்கள்!

இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) நான்காவது மாநில மாநாடு, கடலூர் மாவட்டம் வேப்பூரில் பிப்ரவரி 8 அன்று கட்சியின் நிறுவனர் Dr. T.R. பாரிவேந்தர் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. செங்கோட்டை மற்றும் தலைமை... மேலும் பார்க்க

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? - கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி நியமன ஆணை வழங்க இருந்த நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது`தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செவி... மேலும் பார்க்க

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; காவல்துறையினர்மீது நான்கு பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த 2025 ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28ஆம் தே... மேலும் பார்க்க