செய்திகள் :

``இந்தியா - ரஷ்யா உறவு 'துருவ நட்சத்திரத்தை' போன்றது'' - மோடி பெருமிதம்

post image

இந்திய பயணம்‌‌ முடிந்து ரஷ்ய அதிபர்‌ புதின் ரஷ்யாவிற்கு சென்றுவிட்டார்.

மோடி பேச்சு

இந்தியா - ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஐதராபாத் இல்லத்தில் நேற்று இந்திய பிரதமர்‌ மோடி பேசியதாவது,

"கடந்த எட்டு தசாப்தங்களில், உலகம் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது. மனிதநேயம் பல சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்துள்ளது.

ஆனால், எப்போதும் இந்தியா - ரஷ்யா உறவு என்பது துருவ நட்சத்திரம் போல, நிலையோடு இருந்துள்ளது.

எரிசக்தி பாதுகாப்பு என்பது இந்தியா - ரஷ்யா கூட்டாண்மையின் பலமான மற்றும் முக்கிய தூணாகும்.

ரஷ்யா - உக்ரைன் போரின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே, இந்தியா தொடர்ந்து அமைதியை வலியுறுத்தி வருகிறது" என்று கூறியிருந்தார்.

மோடி - புதின்
மோடி - புதின்

விக்ரம் மிஸ்ரி என்ன சொல்கிறார்?

இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "இந்தியா - ரஷ்யா உறவு என்பது நிலையானது.

நீண்ட காலத்தில் பல பிரச்னைகள் நடந்துள்ளன. ஆனால், எதுவும் இந்தியா - ரஷ்யா உறவின் அடிப்படையை பாதிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 27 மணிநேரம் நீண்ட இந்திய பயணத்தில் எரிசக்தி பாதுகாப்பு, இன்ஜினீயரிங், ஐ.டி, தொழிலாளர்கள் மாற்றம் என பல துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

``கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா `இதில்' உதவும்'' - புதின் அறிவிப்பு

இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நேற்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.அதில் புதின் பேசியதாவது,"இந்தியாவும், ... மேலும் பார்க்க

``எடப்பாடி முதுகில் குத்துவார் என்பது அமித்ஷாவுக்கு தெரியும், ஆகவே'' - புகழேந்தி சொல்வது என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பு குழு சார்பில் வா.புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இபிஎஸ், ஓபிஎஸ் அதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

`100 பில்லியன் டாலர் டார்கெட்; மேக்இன் இந்தியா; புதிய வர்த்தக வழித்தடங்கள்'- புதின் விசிட் ஹைலைட்ஸ்

உக்ரைன் மீது ரஷ்யா போர் (2022) தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு (2021) கடைசியாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், நான்காண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.அவரின் வருகையைத் தொ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "சட்டப்போராட்டம் நடத்தியும் சடங்கை செய்ய முடியவில்லை" - பவன் கல்யாண் வருத்தம்!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார... மேலும் பார்க்க