செய்திகள் :

``கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா `இதில்' உதவும்'' - புதின் அறிவிப்பு

post image

இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நேற்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.

அதில் புதின் பேசியதாவது,

"இந்தியாவும், ரஷ்யாவும் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகிறது. இதற்கு இருநாடுகளுக்கும் இடையே அடிக்கடி நடக்கும் தொலைபேசி அழைப்புகளும், இருதரப்பு உறவின் தொடர் கண்காணிப்புகளும் முக்கியச் சாட்சி.

கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையேயும் கிட்டத்தட்ட 12 சதவிகிதம் அளவிற்கு (64 பில்லியன்‌ டாலர்கள்) வர்த்தகம் அதிகரித்துள்ளது. அது இந்த ஆண்டும் வலுவாக தொடர்ந்து வருகிறது.

இதில் சுமார் 96 சதவிகித வர்த்தகம் இரு‌நாடுகளின் தேசிய நாணயங்கள் மூலமே நடந்துள்ளது.

மோடி - புதின்
மோடி - புதின்

கூடங்குளம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீதம் உள்ள உலைகளை கட்டி முடிக்க இந்தியாவிற்கு ரஷ்யா உதவும்.

அணு மின் துறை தாண்டி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றிலும் இந்தியா, ரஷ்யா இணைந்து செயல்படும்.

ரஷ்யா இந்தியாவின் நம்பகமான எண்ணெய், எரிவாயு சப்ளையராக தொடரும். வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்திற்கு எந்தத் தடையும் இல்லாமல் தொடர்ந்து எரிசக்தி கிடைப்பதை ரஷ்யா உறுதி செய்யும்" என்றார் புதின்.

``இந்தியா - ரஷ்யா உறவு 'துருவ நட்சத்திரத்தை' போன்றது'' - மோடி பெருமிதம்

இந்திய பயணம்‌‌ முடிந்து ரஷ்ய அதிபர்‌ புதின் ரஷ்யாவிற்கு சென்றுவிட்டார்.மோடி பேச்சுஇந்தியா - ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஐதராபாத் இல்லத்தில் நேற்று இந்திய பிரதமர்‌ மோடி பேசியதாவது,"கடந்த எ... மேலும் பார்க்க

``எடப்பாடி முதுகில் குத்துவார் என்பது அமித்ஷாவுக்கு தெரியும், ஆகவே'' - புகழேந்தி சொல்வது என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பு குழு சார்பில் வா.புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இபிஎஸ், ஓபிஎஸ் அதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

`100 பில்லியன் டாலர் டார்கெட்; மேக்இன் இந்தியா; புதிய வர்த்தக வழித்தடங்கள்'- புதின் விசிட் ஹைலைட்ஸ்

உக்ரைன் மீது ரஷ்யா போர் (2022) தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு (2021) கடைசியாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், நான்காண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.அவரின் வருகையைத் தொ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "சட்டப்போராட்டம் நடத்தியும் சடங்கை செய்ய முடியவில்லை" - பவன் கல்யாண் வருத்தம்!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார... மேலும் பார்க்க