செய்திகள் :

`இந்த டாஸ்மாக் கடையை மூடாதீங்க' - மதுபான குடோனுக்கே சென்ற வண்டிசோலை ஆண்கள்! | வைரலான வீடியோ

post image

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி முதற்கட்டமாக தமிழகத்தில் 717 கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிட்டதோடு, மூடப்பட்ட கடைகளின் பட்டியலையும் வெளியிட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில டாஸ்மாக் கடைகளையும் மூடப்பட்டன. இந்த நிலையில் குன்னூர் அருகில் உள்ள வண்டிசோலை பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என வலியுறுத்தி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் சிலர் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கே சென்று முறையிட்டு மனு கொடுத்திருக்கிறார்கள். அதோடு நிற்காமல் டாஸ்மாக் குடோனுக்கு சென்றும் முறையிட்டிருக்கிறார்கள்.ன்

வண்டிசோலை பகுதி ஆண்கள்

இது குறித்து பேசும் அவர்கள், " மது குடித்தால் தான் எங்களால் வேலைக்கு போக முடியும். தினமும் 300 ரூபாய் சம்பளம் வாங்குகிறோம்.‌ மது குடிக்க ரூ.150, பீடி செலவு 50 போக மீதமுள்ள 100 ரூபாயை வீட்டுக்கு தினமும் கொடுத்து வருகிறோம்.

இந்த கடையை மூடிவிட்டால் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று மது வாங்க வேண்டும். எங்களால் வேலைக்கு செல்ல முடியாது. குடும்பத்தையும் பார்க்க முடியாது" என கூறியுள்ளனர். இவர்கள் பேசிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

HBD CM Vijay: முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் & சினிமா பிரபலங்கள்!

Wishing my brother, our Honorable CM of Tamilnadu, Thiru. Joseph Vijay avargale, a very very happy and healthy birthday. May God bless you in abundance. Loads of love. ❤️❤️❤️❤️❤️ @CMOTamilnadu #Vijay#... மேலும் பார்க்க

ஈரோடு: தூய்மைப் பணியைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவு - போராட்டத்தில் இறங்கிய பணியாளர்கள்!

தமிழ்நாட்டில் உள்ள சில மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருப்பதாக கடந்த சனிக்கிழமை தகவல்கள் வெளியாகின. தமிழ்நாடு அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புக... மேலும் பார்க்க

புதுச்சேரி: காவல்துறை சார்பில் நடைபெற்ற புதிய கிரிமினல் சட்டங்கள் கண்காட்சி - Album

புதிய கிரிமினல் சட்டங்கள் குறித்த கண்காட்சிபுதிய கிரிமினல் சட்டங்கள் குறித்த கண்காட்சிபுதிய கிரிமினல் சட்டங்கள் குறித்த கண்காட்சிபுதிய கிரிமினல் சட்டங்கள் குறித்த கண்காட்சிபுதிய கிரிமினல் சட்டங்கள் கு... மேலும் பார்க்க

`இந்தியா பிற நாடுகளின் குப்பைகளை கொட்டும் இடமாக மாற அனுமதிக்க முடியாது' - மதுரை உயர் நீதிமன்றம்

சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீபதி பேப்பர் அண்ட் போர்ட்ஸ் மற்றும் ராஜராஜேஸ்வரி கிராஃப்ட்ஸ் தனியார் நிறுவனங்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “ கனடா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரி... மேலும் பார்க்க

மணல் குவாரி வழக்கு: `தவறு செய்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்க'- உயர் நீதிமன்றம் அதிரடி

மதுரை மாவட்டம், கள்ளிக்குடியைச் சேர்ந்த அருண் குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அதில், “ மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு மிக முக்கிய ஆ... மேலும் பார்க்க

மதுரை: மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்யவந்த நீதிமன்ற பணியாளர்கள் – காரணம் என்ன?

மதுரை மாவட்டம், உத்தங்குடி நீதிமன்றம் அருகேயுள்ள அருள்மிகு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகரத்தார் ட்ரஸ்ட் சார்பில் இரண்டரை ஏக்கர் நிலமானது, கடந்த 2004-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் கையகப்பட... மேலும் பார்க்க