செய்திகள் :

ஆபாசப் பட மோகம்; 9 மாதக் குழந்தையைக் கடத்திப் பாலியல் கொடுமைசெய்த 12 வயது சிறுவன் - உ.பி அதிர்ச்சி!

post image

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அருகில் குலாரிஹா என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 9 மாத மகளை தங்களது அருகில் படுக்க வைத்துவிட்டு உறங்கினர். அதிகாலை 2 மணிக்கு எழுந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இரவோடு இரவாக அவர்கள் வசித்த கிராமம் முழுக்க குழந்தையைத் தேடினர். இறுதியில் அக்குழந்தை வீட்டில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் ரத்தப்போக்குடன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து இது குறித்து விசாரணை நடத்தினர். போலீஸார் முதலில் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தினர். இறுதியில் குழந்தையின் வீட்டிற்கு 3 நாள்களுக்கு முன்பு சண்டிகரில் இருந்து 12 வயது உறவுக்கார சிறுவன் வந்திருந்தான். அவனிடம் விசாரித்தபோது ஆரம்பத்தில் மழுப்பலாக பதிலளித்தான். ஆனால் தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டான்.

இது குறித்து போலீஸ் அதிகாரி நிமேஷ் பாட்டீல் கூறுகையில், ''சிறுவன் இரவு நேரத்தில் மது அருந்தி இருக்கிறான். அதனை தொடர்ந்து தனது மொபைல் போனில் ஆபாச படங்களை பார்த்து இருக்கிறான். அவனது மொபைல் போனை சோதித்து பார்த்தபோது 100 ஆபாச இணையதளங்கள், 50 வீடியோக்களை பார்த்திருந்தது தெரிய வந்தது. ஆபாச வீடியோ பார்த்தபிறகு வீட்டில் தனது பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்த 9 மாத சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அவனை காவலில் எடுத்து மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

வெளியேறிய மணமகள்; மணமேடை ஏற்றப்பட்ட 13 வயது சகோதரி - மொட்டை கடிதத்தால் நிறுத்தப்பட்ட திருமணம்!

மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயதான ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பதாக போலீஸ் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. 13 வயது மாணவியின் மூத்த... மேலும் பார்க்க

`ஆண் குழந்தை ரூ.7-8 லட்சம்.. பெண் குழந்தை ரூ.3-4 லட்சம்'- டெல்லியை அதிரவைத்த குழந்தை கடத்தல் கும்பல்

டெல்லியில் மத்திய பகுதியில் உள்ள பாஹர்கஞ்ச் பகுதியில் அடிக்கடி ஒரு பெண் வேறு வேறு குழந்தைகளுடன் நடமாடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அத்தகவலின் அடிப்படையில் அது குறித்து விசாரி... மேலும் பார்க்க

``மது அருந்த தண்ணீர் பாட்டில் தராததால் அடித்துக் கொன்றோம்" - வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் பகீர்!

ஜார்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டம், போல்பெல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் சிங். இவர், தூத்துக்குடி சில்லாநத்தம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்... மேலும் பார்க்க

நீட் தேர்வுக்குத் தயாராக இருந்த நிலையில், விபரீத முடிவெடுத்த மாணவி - பாலக்கோட்டில் சோகம்!

இன்று நடைபெறும் நீட் தேர்வில் பங்கேற்க இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைதருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகிலுள்ள எண்டப்பட... மேலும் பார்க்க

கூடலூர்: காப்பி தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த ஆண் யானை; தீவிர விசாரணையில் வனத்துறை!

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில், தொடரும் ஆக்கிரமிப்புகளால் யானைகளின் வழித்தடங்கள் துண்டாடப்பட்டு வருகின்றன. தண்ணீர் தேவையை பூர... மேலும் பார்க்க

திருச்சி கலெக்டர் சேரில் அமர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட வடமாநில இளைஞர் - உலா வரும் பரபர வீடியோ!

திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரின் அறையில் வடமாநில இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா அல... மேலும் பார்க்க