பிரிந்து 24 ஆண்டுகள்! தொழில் தொடங்க பணம் கொடுத்த முன்னாள் காதலியை தேடும் சீன காத...
"இனி எதிரிகளை தோலுரித்துக் காட்டுவதுதான் ஒரே வேலை"-தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் என்.ஆனந்த்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அந்த சமயத்தில் தவெக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சம்பவத்தை அடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

அந்தவகையில் இன்று (நவ.5) மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதில் பேசிய தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், " தவெக தலைவர் விஜய்யை யாரும் எளிதில் அசைத்துப் பார்க்கமுடியாது. ஏனெனில், இவர் தாய்மார்களின் நம்பிக்கை.
தமிழ்மண்ணின் நம்பிக்கை. இனி எதிரிகளை தோலுரித்துக் காட்டுவதுதான் ஒரே வேலை.
மக்களுக்கான மாற்றத்தை கொடுக்கப்போகும் ஒரே கட்சி தவெக. மாபெரும் இயக்கத்துக்கு கட்டுப்பாடு அவசியம்.

தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு போகவேண்டும். இனி ஒரு நொடியும் நமக்கு ஓய்வில்லை.
ஒவ்வொரு கிராமமாக வீதி வீதியாகச் செல்ல வேண்டும். ஆளுங்கட்சியின் அவலங்களை எடுத்துரைக்க வேண்டும்.
தலைவரை முதல்வராக்க சத்தியம் செய்து தவமாய் இருந்து உழைக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.
















