செய்திகள் :

இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்; ஏற்கெனவே ரூ.7 உயர்வு; இன்னும் எவ்வளவு உயரலாம்?

post image

ஈரான் போர் காரணமாக, இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றாமல் மத்திய அரசு சமாளித்தது.

ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் தினம் தினம் ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்ததால், இந்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கையிலெடுத்தது.

அதன்படி, எண்ணெய் விலை உயர்வையும், நஷ்டத்தையும் சமாளிக்க முதன்முதலாக மே 15-ம் தேதி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டது.

கேஸ் சிலிண்டர்
கேஸ் சிலிண்டர்

இன்று ஐந்தாவது முறையாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை 11 காசுகள் உயர்ந்து ரூ.107.87-க்கும், டீசல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.99.56-க்கும் விற்பனை ஆகி வருகிறது.

மே 15-ம் தேதி முதல் சென்னையில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.7.07 உயர்ந்துள்ளது... டீசல் விலை ரூ.7.11 உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை மட்டும் இன்று உயர்வா என்று பார்த்தால், கிடையாது. வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலையும் இன்று ஏற்றப்பட்டுள்ளது.

இன்னும் எத்தனை ரூபாய்?

இதுவரை நான்கு முறை விலை ஏற்றப்பட்டுள்ள வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் (19 கிலோ), இன்று ரூ.46 உயர்ந்து ரூ.3,283-க்கு விற்பனை ஆகி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு இத்துடன் முடிந்தது என்று நினைத்துவிட வேண்டாம். பெட்ரோல், டீசல் விலை இன்னும் உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பொருளாதார நிபுணர்களின் கணிப்புப் படி, பெட்ரோல், டீசல் விலை மொத்தமாக ரூ.10 வரை உயரலாம். ஏற்கெனவே ரூ.7 உயர்ந்துவிட்ட நிலையில், இன்னும் ரூ.3 உயரலாம்.

"'ஆபரேஷன் சிந்தூர் 2.0' -க்கு இந்திய ராணுவம் தயாராகி வருகிறது!" - ராணுவத் தளபதி ஜெனரல் திவேதி

தேவை ஏற்பட்டால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கையைத் தொடங்குவதற்கு இந்திய ஆயுதப் படைகள் முழுத் தயார் நிலையில் இருப்பதாக ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். மேலும், இந்தியப் ராணுவம்,... மேலும் பார்க்க

இனி ரூபாய் நோட்டு பேப்பரில் வராது; 'பிளாஸ்டிக்கில்' வரப்போகிறது? - RBI-க்கு ஏன் இந்த யோசனை?

இதுவரை இந்திய ரூபாய் நோட்டுகளைத் தாள்களில் தானே பார்த்திருக்கிறோம். இனி பிளாஸ்டிக்கில் பார்த்தாலும் பார்ப்போம். இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான யோசனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது புழக்கத்... மேலும் பார்க்க

22 வயதில் ஐபிஎஸ்; `தமிழ்நாட்டின் புதிய டிஜிபி' - மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

தமிழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவி இருந்து வருகிறது. இந்தப் பதவிக்கு தகுதியான சீனியர் டி.ஜி.பி-க்களில் மூன்று அல்லது 5 பேரை மத்திய அரசின் யு.பி.எஸ... மேலும் பார்க்க

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா தொடர்ந்து தள்ளிப் போவது ஏன்?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க, 108 இடங்களில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட்கள், ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு விஜய் புதிய ஆட்சியை அமைத்தார். முதல்வரா... மேலும் பார்க்க

பத்திரிகையாளர்களை தவிர்த்த முதல்வர் விஜய்! - முன்னாள் முதல்வர்கள் பின்பற்றிய மரபை உடைப்பது முறையா?

முதல்வர் விஜய் அவர்கள் டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் கூப்பிட கூப்பிட, எந்த பதிலும் சொல்லாமல் போன அந்த வீடியோ தான் இணையதளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது.ஏன் முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களை தவிர்க்கி... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: `சுவாமி தரிசனமா, ரூ.4,000 ஜிபே.!' - அமைச்சரிடமே வசூல் வேட்டை நடத்திய அர்ச்சகர்கள்!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான ... மேலும் பார்க்க