செய்திகள் :

இறைச்சிக்காக கடத்தப்பட்ட 7 நாய்கள்; ஓடும் லாரியிலிருந்து தப்பித்து 17 கிமீ தூரம் பயணம் - viral video

post image

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் பகுதியில், நாய் இறைச்சி கடைக்காக கடத்திச் செல்லப்பட்ட ஏழு வளர்ப்பு நாய்கள், ஓடும் லாரியில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்து, சுமார் 17 கிலோமீட்டர் தூரம் ஒன்றாகவே பயணித்துத் தங்களது கிராமத்திற்குத் திரும்பியுள்ளன.

இந்த நாய்கள் நெடுஞ்சாலையில் வரிசையாக நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த மார்ச் 16-ம் தேதி, ஒரு நாய் இறைச்சிக் கடையைச் சேர்ந்த நபர்கள் இந்த நாய்களைத் திருடி லாரியில் ஏற்றிச் சென்றுள்ளனர். ஆனால், இடையில் அந்த லாரியில் இருந்து தப்பித்த இந்த நாய்கள், வழி தெரியாத நிலையிலும் ஒன்றுக்கொன்று துணையாக நின்றபடி தங்கள் இருப்பிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கின.

இதில் ஜெர்மன் ஷெப்பர்ட், கோல்டன் ரெட்ரீவர், லாப்ரடார் மற்றும் கோர்கி உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த நாய்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நாய்கள் நெடுஞ்சாலையில் கூட்டமாகச் செல்வதைப் பார்த்த லூ என்ற நபர், அவற்றிற்கு உதவ முயன்றார். ஆனால், அந்த நாய்கள் எதற்கும் நிற்காமல் தங்களது இலக்கை நோக்கி உறுதியாகச் சென்றன. நாய்களின் நடமாட்டத்தைக் கவனித்த தன்னார்வலர்கள், அவை பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்தனர்.

இந்த நாய்கள் அனைத்தும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவை என்றும், அவை எப்போதும் ஒன்றாக விளையாடும் பழக்கம் கொண்டவை என்பதால் இவ்வளவு தூரம் பிரியாமல் ஒன்றாகவே பயணித்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களாக 17 கி.மீ தூரம் அலைந்து திரிந்த இந்த நாய்கள், இறுதியாக மார்ச் 18 அன்று தங்கள் கிராமத்தை அடைந்து உரிமையாளர்களிடம் சேர்ந்தன. ஒரு நாய் மட்டும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டது.

சீனாவில் நாய் திருடுவது ஒரு குற்றச் செயலாகும். இந்தச் சம்பவம் விலங்குகளின் அறிவுத்திறனையும், அவற்றுக்கு இடையே உள்ள பிணைப்பையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

`161 பேர், 363 மணிநேரத்தில் உருவாக்கியது' - பார்ட்னருக்கு நடிகர் ஆமிர் கானின் காதல் பரிசு!

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, இருவரையும் விவாகரத்து செய்துவிட்டார். தற்போது கௌரி என்ற பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துவருகிறார்.தனது 60-வது வயதில்தான் ... மேலும் பார்க்க

'மோசமான முறையில் நடந்துகொண்டார்' - இயக்குநர் பாலியல் தொல்லை அளித்ததாக மோனாலிசா போஸ்லே குற்றச்சாட்டு

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மூலம் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே வைரல் நட்சத்திரமானார். கேரளத்தில் சினிமா படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள அவர், தனது காதலனான மகாராஷ்டிராவைச் சேர... மேலும் பார்க்க

`20 முறை முயற்சி செய்தும் வேகவில்லை' - இறைச்சி வேகவில்லை என்று கூறி போலீஸாருக்கு வந்த நூதன புகார்!

போலீஸாருக்கு எத்தனையோ விதமான நூதன புகார்கள் வருவதுண்டு. அதனையும் சமாளித்து தீர்த்து வைப்பதுதான் போலீஸாரின் வேலையாக இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் ஒருவர் கொண்டு வந்த புகாரை கண்டு போலீஸார் அதிர்ச்சியடை... மேலும் பார்க்க

ஹிமாச்சல்: 6 மாதங்களுக்கு முதல்வர், எம்.எல்.ஏ, அதிகாரிகள் சம்பளத்தின் ஒருபகுதி நிறுத்திவைப்பு!- ஏன்?

ஹிமாச்சல பிரதேசத்தில் தற்போது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து நிதிநிலையை சரி செய்ய அரசு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் ஒரு பகுதியை 6 மாதத்திற்கு நிறுத்தி வை... மேலும் பார்க்க

தாக்கி வீடியோ எடுத்து மிரட்டல்; தற்கொலை செய்த அதிகாரி: பஞ்சாப் அமைச்சர் லால்ஜித் சிங் ராஜினாமா!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் மாநில அரசு கிடங்கில் மாவட்ட மேலாளராக இருந்த ககன்தீப் சிங் நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சமூக வலை... மேலும் பார்க்க

`நீங்கள் வராவிட்டால் விற்று இருப்பார்கள்'- ஐஏஎஸ் அதிகாரி என கூறி திருமணம்செய்து பெண்ணை விற்க முயற்சி

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தனது மகளுக்கு மணமகன் தேடிக்கொண்டிருந்தார். அவரிடம் எட்டாவா நகரை சேர்ந்த பிரித்தம்குமார் என்பவர் பெண் கேட்டு வந்தார். பிரித்தம்குமார் தன்ன... மேலும் பார்க்க