செய்திகள் :

இலவச மாம்பழ விருந்து: அமெரிக்கப் பூங்காவைத் திருவிழாக்கோலமாக்கிய அசல் இந்திய மாம்பழங்கள்!

post image

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பூங்கா ஒன்றில், இந்திய மாம்பழங்களுக்காக நடத்தப்பட்ட ஒரு பிரமாண்டமான "இலவச மாம்பழத் திருவிழா" அங்கிருந்த மக்களை ஒட்டுமொத்தமாகக் கவர்ந்து தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் நிலவும் இந்திய மாம்பழங்களுக்கான தட்டுப்பாட்டிற்கு ஒரு ஜாலியான தீர்வாக இந்தத் தனித்துவமான மாம்பழ விருந்து ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

வெறும் 8 நண்பர்களுடன் ஒரு சிறிய பெட்டி மாம்பழங்களை வைத்துத் தொடங்கப்பட்ட இந்தச் சந்திப்பு, தற்போ நூற்றுக்கணக்கான மக்கள் கொண்டாடும் ஒரு மாபெரும் சமூகத் திருவிழாவாக உருவெடுத்துள்ளது.

அங்கு இந்திய மாம்பழங்களின் வரத்து மிகவும் குறைவாக இருப்பதாலும், ஒரு பெட்டி மாம்பழத்தின் விலை மிக அதிகமாக விற்பனை செய்யப்படுவதாலும், இந்த இலவச மாம்பழ விருந்து மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தத் திருவிழாவிற்காக இந்தியாவின் பெருமைகளான அல்போன்சா, கேசர் மற்றும் சௌன்சா போன்ற சுவையான அசல் இந்திய மாம்பழ வகைகள் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டிருந்தன.

இந்த விழாவில் கலந்துகொண்ட உள்ளூர் மக்கள், "நாங்கள் இதுவரை சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்த மாம்பழங்கள் இவைதான், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு அற்புதமாக இருந்தது" என்று தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். இந்தத் திருவிழா அங்கு வாழும் இந்தியர்களுக்குத் தங்களின் சிறுவயது கோடைகால நினைவுகளையும், தாயகத்தின் சுவையையும் மீட்டுத் தரும் ஓர் உணர்வுப்பூர்வமான நிகழ்வாக அமைந்தது.

உலக அளவில் விளையும் மொத்த மாம்பழங்களில் பாதியளவு இந்தியாவில்தான் விளைவிக்கப்படுகிறது என்றாலும், கடுமையான ஏற்றுமதி விதிகள் மற்றும் போக்குவரத்துச் சவால்கள் காரணமாக அதில் மிகக் குறைந்த அளவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே அமெரிக்காவில் இந்திய மாம்பழங்களுக்கு எப்போதுமே ஏகப்பட்ட தேவை நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் முக்கனிகளில் முதலாவதான மாம்பழத்தின் சுவையை உலகினருக்குப் பறைசாற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்த மாம்பழத் திருவிழா, உலகெங்கிலும் பாராட்டுகளை அள்ளி வருகிறது.

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க