செய்திகள் :

`ஈரானின் 5 நிபந்தனைகளும் அமெரிக்காவின் 5 பதில் நிபந்தனைகளும்.!' - என்னவாகும் போர் நிறுத்தம்?

post image

சீன பயணத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் 'ஈரான்' மீது ஃபோக்கஸ் செய்ய தொடங்கியுள்ளார்.

ட்ரம்பின் சீன பயணம் ஈரான் போரில் முக்கிய திருப்புமுனையைக் கொண்டு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஈரானும், அமெரிக்காவும் 'நான்... நான்' என பரஸ்பரமாக ஐந்து நிபந்தனைகளை விதித்துள்ளது என்று மத்திய கிழக்கு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் போர்
ஈரான் போர்

ஈரானின் 5 நிபந்தனைகள்:

1. ஈரான், லெபனான் மீதான அனைத்து தாக்குதல்களையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும்.

2. ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்.

3. முடக்கப்பட்டுள்ள ஈரான் நிதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

4. போர் சம்பந்தமான பாதிப்புகளுக்கு நஷ்ட ஈடு வேண்டும்.

5. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு உள்ள இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும்.

அமெரிக்காவின் 5 நிபந்தனைகள்:

1. முன்னால் விதிக்கப்பட்ட தடை மற்றும் கொள்கை முடிவுகளால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது.

2. ஈரானிடம் இருக்கும் கிட்டத்தட்ட 400 கிலோ கிராம் யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்.

3. ஈரானின் ஒரே ஒரு அணு ஆயுத நிலையம் மட்டுமே இயங்க வேண்டும்.

4. முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளில் 25 சதவிகிதத்தைக் கூட விடுவிக்க முடியாது.

5. பேச்சுவார்த்தை முடிந்தால் தான் ஈரான், லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்த முடியும்.

இந்த போட்டி நிபந்தனைகளால் போர் நிறுத்தம் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது!

`கிலுகிலுப்பை ஆட்டி விளையாட்டு காட்டும் ஆளைப் பார்த்து குழந்தை நிச்சயம் மயங்கும்; ஆனா.!” - உதயநிதி

திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கே.கலைவாணன் இல்லத் திருமண விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் உதயநிதி ஸ்டாலி... மேலும் பார்க்க

'இன்ஸ்டாகிராம் மூலமாக தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது' - ஸ்டாலின் கூறியது என்ன?

தஞ்சாவூரில் திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கிறார். திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், " யாரும் சோகமாக இருக்கத் தேவையில்லை. நாம் தான் ... மேலும் பார்க்க

“கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! மனசு நோகுதய்யா.!" - வேதனையுடன் அதிமுகவில் இருந்து விலகிய செம்மலை

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக பழனிசாமி அணி, சி.வி.சண்முகம் அணி என இரண்டாக பிரிந்துள்ளது. இதை காரணம் காட்டி, அதிமுகவின் சீனியர் தலைவர் செம்மலை அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். இந்த விலகலுக்கு ... மேலும் பார்க்க

அன்பார்ந்த வேட்பாள பெருங்குடி மக்களுக்கு... நடப்பு அரசியல் கண்டு அழும் வாக்காளனின் கடிதம்!

அன்பார்ந்த வேட்பாள பெருங்குடி மக்களே..'வழக்கத்தைத் தாண்டி இந்தத் தடவை கொஞ்சம் அதிகமா ஏமாந்துட்டோமோ'ங்கிற ஆதங்கத்துடன் உங்களுக்கு ஓட்டுப் போட்ட வாக்காளன் வரையும் மடல் இது. 'யோக்கியன் வர்றான் செம்பெடுத்... மேலும் பார்க்க

“அ.தி.மு.க - தி.மு.க உறவை அம்பலப்படுத்தும் ப்ளான்.!” - த.வெ.க தலைமை வியூகம்!

தமிழக அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்த அ.தி.மு.கவும், தி.மு.க-வும் தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அ.தி.மு.க- தி.மு. க கூட்டணி வைத்து ஆட்சியை ... மேலும் பார்க்க

சேலம்: `தொடர் தோல்வி எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - சுவரொட்டிகளால் பதறும் ஆதரவாளர்கள்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பெரும்பான்மையை நிரூபித்த த.வெ.க ஆட்சியை நடத்தி வருகிறது. இரண்டாம் இடம் பிடித்த தி.மு.க எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அ.தி.மு.க - வி... மேலும் பார்க்க