செய்திகள் :

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமா? - 'கோம் நகரில் தீவிர சிகிச்சை?' - உளவுத்துறை தகவல்!

post image

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் மூத்த உச்சத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். அதே தாக்குதலில் அவர் மகன் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்ததாக ஈரான் ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்தது. மார்ச் மாதத் தொடக்கத்தில் தன்னுடைய தந்தையின் வாரிசாக மொஜ்தபா தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், போர் தொடங்கியதிலிருந்து அவர் பொதுவெளியில் தோன்றவில்லை.

மொஜ்தபா கமேனி
மொஜ்தபா கமேனி

இந்த நிலையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் பகிர்ந்துள்ள ராஜதந்திரக் குறிப்பின்படி, 56 வயதான மொஜ்தபா கமேனி, டெஹ்ரானுக்கு தெற்கே உள்ள கோம் நகரில் ரகசியமாகச் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஆழ்மயக்க நிலையில் இருப்பதாகவும், அவருக்கு முகத்தில் காயங்கள் மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் தற்போது சுயநினைவற்ற நிலையில் (Coma) இருப்பதாகவும், நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையில் அவர் இல்லை என்றும் ‘தி டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மொஜ்தபா கமேனி ஆரோக்கியமாக இருப்பதாகக் காட்டுவதற்காக, அவர் இஸ்ரேலின் அணுமின் நிலைய வரைபடத்தை ஆய்வு செய்வது போன்ற ஒரு காணொளியை ஈரான் அரசுத் தொலைக்காட்சி திங்களன்று வெளியிட்டது. ஆனால், அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ‘டீப் ஃபேக்’ (Deepfake) வீடியோ என இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கொல்லப்பட்ட அலி கமேனியின் உடலை நல்லடக்கம் செய்யக் கோம் நகரில் பிரமாண்ட நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் கட்டப்படுவதால், கவலைக்கிடமாக உள்ள மொஜ்தபா கமேனியும் அங்கேயே நல்லடக்கம் செய்யப்படலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. ஆனால், ஈரான் தரப்பில் இதுவரை எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கரூர்: 'கடவூர் ஒன்றியத்தை மேம்படுத்த இவற்றைச் செய்யலாம்...' - வேட்பாளர்களுக்கு இளைஞரின் வேண்டுகோள்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி. மிகவும் பின்தங்கிய தொகுதியான இந்த தொகுதியில் வரும் கடவூர் பகுதி வளர்ச்சி எதுவும் இன்றி கைவிடப்பட்ட பகுதியாக உள... மேலும் பார்க்க

ரூ.1048 கோடி சொத்து: 'தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!' - லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ்

அ.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின், நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்நிலையில், அவர் தனது வேட்புமனுவில் இணைத்த... மேலும் பார்க்க

`ஸ்டாலின் பாஜக-வோடு ரகசிய உடன்பாட்டில் இருக்கிறார்..!'- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் அதே நேரத்தில் மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடக்கிறது. அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பதால் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் ... மேலும் பார்க்க

குஜராத் உள்ளாட்சி தேர்தல்: சோஷியல் மீடியாவுக்கு முக்கியத்துவம்; வேட்பாளர் தேர்வில் பாஜக பிளான் என்ன?

குஜராத் மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் சோசியல் மீடியா முக்கியமான இடத்தை பிடித்து இருக்கிறது. வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசாரத்திற்கு இந்த சோசியல் மீ... மேலும் பார்க்க

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்? – கரூரிலிருந்து களமிறங்கியது ஏன்?

கரூர் மாவட்டத்தின் பல்வேறு சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 18 பேர், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே திமுக கரூர் மாவட்டச் செயலாளரும், மேற்கு மண்டல பொறுப்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: இடைத்தேர்தலில் போட்டியிடும் அஜித் பவார் மனைவி; எதிர்த்து வேட்பாளரை நிறுத்திய காங்கிரஸ்

மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் பிப்ரவரி இறுதியில் நடந்த விமான விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் அகால மரணம் அடைந்தார். இதையடுத்து அஜித்பவார் வகித்து வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவி மற்றும் துணை ம... மேலும் பார்க்க