'எது சரியோ அதை செய்யுங்க!' உத்தரவிட்ட முதல்வர் விஜய்? - மத்திய அரசுடன் மோத தயாரா...
`உங்கள் AI அசிஸ்டன்ட் என்ன செய்கிறது? இனி எல்லாமே தெரியும்!'- வருகிறது கூகுளின் 'Android Halo'
கூகுள் நிறுவனம் தனது ஜெமினி (Gemini) AI மாடலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில், 'ஏஜென்டிக் AI' (Agentic AI) மென்பொருட்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில், பயனர்கள் தங்கள் AI அசிஸ்டன்ட்களின் செயல்பாடுகளை எளிதாகக் கண்காணிக்க உதவும் வகையில், 'ஆண்ட்ராய்டு ஹாலோ' (Android Halo) என்ற புதிய அம்சத்தை அதிரடியாக அறிவித்துள்ளது. இனி உங்கள் போனில் AI என்ன வேலை செய்கிறது என்பதை நீங்கள் மறைவாக அல்ல, வெளிப்படையாகவே பார்க்கலாம்!

சரி, இந்த ஆண்ட்ராய்டு ஹாலோ எப்படி வேலை செய்கிறது?
இது அடிப்படையில் ஒரு மேம்பட்ட நோட்டிஃபிகேஷன் சிஸ்டம் போலவே செயல்படும். உங்கள் AI ஏஜென்ட் ஒரு பணியில் ஈடுபட்டிருக்கும்போது, லைவ் மோடில் செயல்படும்போது அல்லது உங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பும்போது, உங்கள் போனின் டிஸ்ப்ளேவின் மேற்புறத்தில் ஒரு சின்னம் மாதிரி தோன்றி அதன் நிலையைத் தெரிவிக்கும்.
கூகுள் இதை 'சப்ட்டில் கம்யூனிகேஷன்' (subtle communication) என்று குறிப்பிடுகிறது. இதன் மூலம், உங்கள் AI அசிஸ்டன்ட் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை ஒரே பார்வையில் நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும். இது ரொம்பவே பிராக்டிக்கலான ஒரு விஷயம்.
இந்த வசதி எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆண்ட்ராய்டு ஹாலோ வெளியிடப்படும் என்று கூகுள் கூறியுள்ளது. முதற்கட்டமாக, இது கூகுளின் ஜெமினி ஸ்பார்க் (Gemini Spark) மற்றும் பிற AI ஏஜென்ட்களுடன் இணக்கமாகச் செயல்படும். ஆனால், எந்தெந்த நிறுவனங்களின் போன்களில் இந்த அம்சம் சப்போர்ட் செய்யப்படும் என்பது பற்றி கூகுள் இன்னும் எதுவும் சொல்லவில்லை. வரும் மாதங்களில் இது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். பிக்சல் போன்களுக்கு மட்டும் பிரத்யேகமாக இருக்குமா அல்லது எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் கிடைக்குமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

மொத்தத்தில், ஆண்ட்ராய்டு ஹாலோ என்பது வெறும் ஒரு நோட்டிஃபிகேஷன் அம்சம் மட்டுமல்ல. AI தொழில்நுட்பம் மனிதர்களின் தலையீடு இல்லாமல் சுயமாகச் செயல்படத் தொடங்கும் காலத்தில், அதன் செயல்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடன் பயனர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு முக்கியமான படியாகவே இது பார்க்கப்படுகிறது. இது பயனர்களுக்கும் AI-க்கும் இடையே ஒரு நம்பிக்கையான உறவை உருவாக்க உதவும் என டெக் உலகில் நம்புக்கிறார்கள்.!



















