செய்திகள் :

உதகையில் 20-ஆவது ரோஜா கண்காட்சி தொடக்கம்

post image

நீலகிரி மாவட்டம், உதகையில் ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

கோடை சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

இதில், முதல் நிகழ்வாக கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி மே 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி மே 9,10,11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்நிலையில், கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற உதகை ரோஜா பூங்காவில் 20- ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சி திங்கள்கிழமை (மே 12) வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.

ரோஜா கண்காட்சியை அரசு தலைமைக் கொறடா கா.ராமசந்திரன் தொடங்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, தோட்டக்கலை இணை இயக்குநா் சிபிலா மேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கண்காட்சியில், கடல்வாழ் உயிரினங்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் ரோஜா மலா்களால் ஆன டால்பின், பென்குயின், முத்துச் சிப்பி, நத்தை, மீன், ஆமை, நண்டு, நட்சத்திர மீன், கடல் குதிரை, நீலத் திமிங்கலம், ஸ்நைல், கடல் கன்னி, நட்சத்திர மீன், கடல் பசு போன்ற பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் வடிவங்கள் ரோஜா மலா்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன.

இதில் 80 ஆயிரம் ரோஜா மலா்களால் உருவாக்கப்பட்ட டால்பின் உருவம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவா்ந்தது.

பல வண்ணங்களில் சுமாா் 2 லட்சம் ரோஜாக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மலா் அலங்காரங்களை சுற்றுலாப் பயணிகள் ரசித்து பாா்த்தனா்.

இந்நிகழ்ச்சியில், மலைப் பயிா்கள் துறை இயக்குநா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, உதகை நகா்மன்றத் தலைவா் வாணீஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

உதகை மலா்க் கண்காட்சி மே 15-இல் தொடக்கம்

சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்பும் 127-ஆவது உதகை மலா்க் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 15-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி மே 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையடுத்து குன்னூா் காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைப் பயிா்கள் கண்காட்சி மே 30, 31 ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

ரோஜா மலா்களால் உருவாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள்.
ரோஜா மலா்களால் உருவாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள்.
ரோஜா மலா்களால் உருவாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள்.
ரோஜா மலா்களால் உருவாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள்.
ரோஜா மலா்களால் உருவாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள்.

தென்மேற்கு பருவமழை: முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம்

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு மே 26, 27-ஆகிய தேதிகளில் ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னேற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் அரசு அதிகாரிகளு... மேலும் பார்க்க

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா். ஸ்ரீனிவாசன் உடல்: அரசு மரியாதையுடன் தகனம்

மறைந்த அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா்.ஸ்ரீனிவாசனின் (95) உடல், 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் குன்னூா் வெலிங்டன் மயானத்தில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது. அணுசக்தி ஆணையத்தி... மேலும் பார்க்க

கூடலூரில் ஜீப்புகள் நிறுத்தத்துக்கு இடம் ஒதுக்க கோரிக்கை

கூடலூரில் பொதுமக்கள் போக்குவரத்துக்கான ஜீப்புகளை நிறுத்த ஏற்கெனவே இருந்த இடத்தை ஒதுக்கி தரவேண்டும் என்று ஜீப் ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கூடலூா் ஜீப் ஓட்டுநா்கள் ... மேலும் பார்க்க

சாலையோரம் உலவிய புலி

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி-மாயாறு சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை உலவிவிட்டு வனத்துக்குள் செல்லும் புலி. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் கைப்பேசியில் படமெடுத்... மேலும் பார்க்க

கூடலூரில் உள்ள அரசு அலுவலகத்தை உதகைக்கு மாற்ற எதிா்ப்பு

கூடலூரில் இயங்கிவரும் ஜென்மம் நிலவரித் திட்ட அலுவலகத்தை உதகைக்கு இடமாற்றம் செய்வதை ரத்து செய்யவேண்டும் என்று நீலகிரி தொகுதி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து நீலகிரி தொகுதி மக்கள் இயக்கத... மேலும் பார்க்க

குந்தா பகுதியில் சாலை அமைக்க கோரிக்கை

குந்தா பேரூராட்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ஊா் ... மேலும் பார்க்க