செய்திகள் :

'உதயசூரியன் சின்னம்' - மதிமுகவை நிர்பந்திக்கும் திமுக; டென்ஷனில் துரை வைகோ?

post image

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. ம.தி.மு.க - தி.மு.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ள நிலையில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

ஸ்டாலின்

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது ம.தி.மு.க. உதயசூரியன் சின்னத்திலேயே ம.தி.மு.க வேட்பாளர்கள் களமிறங்கி 4 இடங்களில் வெற்றிபெற்றனர். அதையடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தில் திருச்சியில் போட்டியிட்டபோதும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க நிர்பந்தித்தது தி.மு.க. அதற்கு 'உயிரே போனாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்' ஆவேசம் காட்டினார் துரை வைகோ. ஒருவழியாக திமுகவும் சம்மதித்தது. ஆனால் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கச் சொல்லி நிர்பந்திப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ம.தி.மு.க சீனியர்கள் நிர்வாகிகள் "2026 சட்டமன்றத் தேர்தலில் 12 இடங்களில் போட்டியிட்டு குறைந்தது 7 இடங்களில் வெற்றிபெற்று தேர்தல் ஆணையத்தின் மாநில கட்சி அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. ஆனால் தற்போதைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டு 6 தொகுதிகளை ஒதுக்குங்கள், தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம் என கேட்டிருந்தோம். ஆனால் 4-5 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என கறார் காட்டுகிறது அறிவாலயம்.

துரை வைகோ
துரை வைகோ

அதிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் நீங்கள் நிற்க வேண்டும் என தலைவரிடம் முதலமைச்சரே நேரடியாக கோரியிருக்கிறார். முதல்வரே நேரடியாக பேசுவதால் பொதுச்செயலாளர் வைகோ ஒப்புக்கொள்ளலாமா என்ற சிந்தனையில் இருக்கிறார்.

ஆனால், இதில் துரை வைகோவுக்கு துளியும் விருப்பமில்லை. 'நாடாளுமன்றத் தேர்தலில் போராடி தனிச் சின்னத்தில் நிற்கும் வாய்ப்பை பெற்றோம். இப்போது மீண்டும் தனிச்சின்னத்தில் நிற்க சொல்வது ஏற்கவே முடியாது. தி.மு.க-வின் இந்த கோரிக்கையை நாம் ஏற்க கூடாது' எனக் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருகிறார்" என்றனர்.

LPG: `அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்' - சிலிண்டர் தட்டுப்பாடா? - மத்திய அரசின் திட்டம் என்ன?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்தியக் கிழக்கு நாடுகளில் போர் பரவியது. அதனால், உலக நாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற எண்ணெய், எரிபொருள் விற்பனை சிக்கலை சந்தித்தது. அ... மேலும் பார்க்க

'நமக்காக பேச யாருமில்லை' - விரக்தியடைந்த விசிக நிர்வாகிகள்; இழுபறியில் பேச்சுவார்த்தை?

வி.சி.க - தி.மு.க இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறவில்லை என்றும் வி.சி.க-வுக்காக குரல் கொடுக்க தி.மு.க கூட்டணியில் யாருமே இல்லை என விரக்தியடைந்து வருகிறார்கள் வி.சி.க மாநில நிர... மேலும் பார்க்க

அப்பா நிதிஷ் தேசிய அரசியலுக்கு சென்றால் என்ன, பீகார் அரசியலில் என்ட்ரி கொடுத்த 'மகன்' நிஷாந்த்

முதலமைச்சராக பதவியேற்ற கிட்டத்தட்ட 4 மாதங்களில் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.அடுத்து ராஜ்ய சபா உறுப்பினராக தேசிய அரசியலில் என்ட்ரி கொடுப்பதாகவும் அறிவி... மேலும் பார்க்க

விவசாய கடன் தள்ளுபடி; இரு விமான நிலையங்களிடையே ரூ22000 கோடியில் மெட்ரோ ரயில்- மகா., பட்ஜெட் ஹைலைட்ஸ்

மகாராஷ்டிரா பட்ஜெட்டை மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று தாக்கல் செய்தார். அதில் மும்பையில் வடாலாவில் இருந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வரை ரு.23,487 கோடியில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் தி... மேலும் பார்க்க

இரு தொகுதிகளை குறிவைக்கும் சிற்றரசு; பின்னணியில் உதயநிதி? - யாருக்கு சீட், யாருக்கு கல்தா?

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோர் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்துவருகின்றனர். கடைசி நாளான மார்ச் 6-ம் தேதி சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு வி... மேலும் பார்க்க

ADMK: கட்சிக்கு ரூட் க்ளியர்.. ஆட்சிக்கு? எடப்பாடி பழனிசாமி முன் நிற்கும் சவால் தான் என்ன?

அ.இ.அ.தி.மு.க-வை தொடங்கிய எம்.ஜி.ஆர் மற்றும் தொடர்ந்து வழி நடத்திய ஜெயலலிதா ஆகிய இருவருக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பதவியில் கொஞ்சம் ஆசுவாசமாக உட்கார்ந்திருக்கிறார் எடப்பாடி கே பழனிசாமி.ஜெயலலிதா மறை... மேலும் பார்க்க