செய்திகள் :

"எடப்பாடி பழனிசாமியின் தடுமாற்றமே அதிமுகவின் தோல்வி பயத்தை பறைசாற்றுகிறது" - செங்கோட்டையன்

post image

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார், “அதிமுக தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி இரண்டு கட்டங்களாக வெளியிட்டுள்ளார். பொதுவாக தேர்தல் அறிக்கை முழுமையாக வெளியிடப்பட வேண்டும்.

செங்கோட்டையன்

ஆனால் தோல்வி பயம் காரணமாக ஒவ்வொரு நாளும் சிந்தித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிடுகிறார். இந்தத் தடுமாற்றமே அதிமுகவின் தோல்வி பயத்தை பறைசாற்றுகிறது.

அதிமுகவினர் நேரடியாக தவெகவை விமர்சிக்கிறார்கள். யார் யாருக்கு B டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். திமுகவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, அதிமுக தங்களின் தோல்வி பயத்தை மறைக்க இப்படி பேசி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மேலும், தமிழக மக்கள் தெளிவாக முடிவு எடுத்துவிட்டார்கள். 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். விஜய் தன்னுடைய வருவாயை பொருட்படுத்தாமல் மக்கள் பணியாற்ற வந்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பதவியேற்பார். வெளிநாடு வாழ் தமிழர்கள் முதல் உள்ளூர் குழந்தைகள் வரை தவெகவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. இது இந்திய வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும்.

தவெக விஜய்
தவெக விஜய்

அவர் மீது அனைத்துக் கட்சிகளுக்கும் பயம் ஏற்பட்டுள்ளது. வெற்றி பெற முடியாது என்பதால்தான் விமர்சனம் செய்கிறார்கள்” என்றார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் தவெக பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது!" - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்... மேலும் பார்க்க

ராகுலா, பிரியங்காவா? - கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கரு... மேலும் பார்க்க

"அந்த போன்கால் வரட்டும்!" - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாள... மேலும் பார்க்க

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி... மேலும் பார்க்க

`அமித் ஷா நடிக்கலாம்; ராஜ்யசபா தேர்தலை நடத்த அவசரம் காட்டுவதற்கு இதுதான் காரணம்!' - மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாகவே மாநிலங்களவையில் காலி ஆகும் இடங்களுக்கு தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல... மேலும் பார்க்க