செய்திகள் :

"எடப்பாடி பழனிசாமியின் தடுமாற்றமே அதிமுகவின் தோல்வி பயத்தை பறைசாற்றுகிறது" - செங்கோட்டையன்

post image

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார், “அதிமுக தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி இரண்டு கட்டங்களாக வெளியிட்டுள்ளார். பொதுவாக தேர்தல் அறிக்கை முழுமையாக வெளியிடப்பட வேண்டும்.

செங்கோட்டையன்

ஆனால் தோல்வி பயம் காரணமாக ஒவ்வொரு நாளும் சிந்தித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிடுகிறார். இந்தத் தடுமாற்றமே அதிமுகவின் தோல்வி பயத்தை பறைசாற்றுகிறது.

அதிமுகவினர் நேரடியாக தவெகவை விமர்சிக்கிறார்கள். யார் யாருக்கு B டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். திமுகவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, அதிமுக தங்களின் தோல்வி பயத்தை மறைக்க இப்படி பேசி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மேலும், தமிழக மக்கள் தெளிவாக முடிவு எடுத்துவிட்டார்கள். 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். விஜய் தன்னுடைய வருவாயை பொருட்படுத்தாமல் மக்கள் பணியாற்ற வந்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பதவியேற்பார். வெளிநாடு வாழ் தமிழர்கள் முதல் உள்ளூர் குழந்தைகள் வரை தவெகவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. இது இந்திய வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும்.

தவெக விஜய்
தவெக விஜய்

அவர் மீது அனைத்துக் கட்சிகளுக்கும் பயம் ஏற்பட்டுள்ளது. வெற்றி பெற முடியாது என்பதால்தான் விமர்சனம் செய்கிறார்கள்” என்றார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் தவெக பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

சென்னை: 'அரசுக்கு நன்றி; ஆனால் போராட்டம் தொடரும்!' - தூய்மைப் பணியாளர் போராட்டக்குழு

சென்னையில் தனியார்மயத்தை எதிர்த்து 150 நாள்களுக்கு மேலாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை மீண்டும் மாநகராட்சியின் ஒப்பந்தப் பணியாளர்களாகவே சேர்த்திருக்கிறது சென்னை மாநகராட்சி.கு.பாரதிஇது சம்பந்தமாக தூய்... மேலும் பார்க்க

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணையுமா? - அஜித் பவார் மனைவி, மகன்களை சந்தித்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித்பவார் கடந்த மாதம் 28ம் தேதி நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் துணைமு... மேலும் பார்க்க

'எங்க வீட்டுக்கு வாங்க' என்றழைத்த மோடி; கலைஞரின் எமோஷனல் பதில் - நினைவுக்கூர்ந்த ஜெகத்ரட்சகன்

திருவள்ளூரில் நேற்று (பிப்.5) திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் கட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடி, கலைஞர் கருணாநிதி சந்திப்பின்போது நடந்த விஷயத்தை நினைவுக்கூர்ந்திருக்கிறார்.மேடையில் பேச... மேலும் பார்க்க

`திருச்செந்தூர் தொகுதியை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது' - அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், ”தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் க... மேலும் பார்க்க

India - US Trade Deal: 'இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy'' - எஸ்.ஜி சூர்யா | களம் 02

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க

`நிகிதாவையும் அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்' - மடப்புரம் அஜித்குமாரின் தாயார்

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ... மேலும் பார்க்க