செய்திகள் :

மும்பை: லிஃப்ட்டில் பலூன்களுடன் ஏறிய நபர்; நொடிப் பொழுதில் நடந்த அசம்பாவிதம்; இருவர் காயம்!

post image

மும்பை, கோரேகாவ் பகுதியில் உள்ள அமோல் டவர் என்ற குடியிருப்பு கட்டடத்தில் இருக்கும் லிஃப்டில் பலூன் வெடித்து தீப்பிடித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராஜ்குமார் என்பவர் சாக்குமூட்டையில் ஹீலியம் காஸ் நிரப்பப்பட்ட பலூன்களுடன் லிஃப்டில் ஏறினார். அவரைத் தொடர்ந்து கல்லூரியில் படிக்கும் ஹிமானி (21) என்ற பெண் ஏறினார். மேலும் ஒருவர் ஏறியதால் லிஃப்டில் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சாக்குமூட்டையில் இருந்த காஸ் நிரப்பப்பட்ட பலூன் சத்தத்துடன் வெடித்து, தீப்பிடித்தது. இதனால் மாணவியும், மற்றொரு நபரும் லிஃப்டில் இருந்து நிலைதடுமாறி வெளியில் ஓடினர். ஆனாலும் அவர்களுக்குக் கை, கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது.

பலூன் எடுத்து வந்த நபர் லிஃப்டில் கீழே விழுந்து கிடந்தார். அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இது குறித்து குடியிருப்பாளர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ''சம்பவம் நடந்த கட்டடத்தில் வசிக்கும் அர்பித் ஜெயின் என்பவர் தனது குடும்ப உறுப்பினர் ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாட பலூன் ஆர்டர் செய்திருந்தார்.

அதனை எடுத்து வந்த நபரிடம் எப்படி அதனை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்று பலூன் கடை உரிமையாளர் ஜெய்ஸ்வால் சொல்லவில்லை. எனவே ஜெய்ஸ்வால் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கவனக்குறைவால் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வழக்கமாக ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் வெடித்தாலும் தீப்பிடிக்காது. ஆனால் ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டு இருந்தால் தீப்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே பலூனில் எந்த மாதிரியான வாயு நிரப்பப்பட்டு இருந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்'' என்றார்.

மாணவி ஹிமானி உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மாணவி ஹிமானிக்கு சொந்த ஊர் சூரத் ஆகும். அவர் மும்பையில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இரு விமானங்களின் இறக்கைகள் உரசிக்கொண்டு விபத்து - மும்பை விமான நிலையத்தில் திக் திக்.!

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை மும்பையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. அந்நேரம் ஐதராப... மேலும் பார்க்க

Ajit Pawar: 'நிறைவேறாத முதல்வர் கனவு; ஆட்சியைப் பிடித்த வாக்குறுதி' - யார் இந்த அஜித் பவார்?

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று அதிகாலை தனி விமானத்தில் தனது பாதுகாவலர்களுடன் தனது சொந்த ஊரான பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார்.விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பாராமதியில் விம... மேலும் பார்க்க

Ajit Pawar: துணை முதல்வர் பயணித்த விமானம் விபத்து! - சொந்த ஊரில் அஜித் பவார் உயிரிழந்த சோகம்

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (புதன்கிழமை) காலை மும்பையிலிருந்து பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். காலை சுமார் 8:45 மணியளவ... மேலும் பார்க்க

நாமக்கல்: அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்; நிகழ்விடத்தில் மூவர் பலியான சோகம்

நாமக்கல்லில் இருந்து சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று திருச்சி நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தது.நாமக்கல்-திருச்சி பிரதான சாலையில் ரமேஷ் தியேட்டர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்த... மேலும் பார்க்க

கோவை மாநகரை கரும்புகையால் மூழ்கடித்த தீ விபத்து; களமிறங்கிய ராணுவம்; தீயணைக்கப்பட்டது எப்படி?

கோவை காட்டூர் பகுதியில் வாகன உதிரி பாகங்கள் விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.மூன்று மாடி கட்டிடமான அதன் தரைத்தளத்திலிருந்து, மொட்டை மாடி வரை அனைத்து தள... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர்: விபத்துக்குள்ளான ராணுவ வாகனம்... 10 வீரர்கள் பலி, பலர் படுகாயம்! - விவரம் என்ன?

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் கானி டாப் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் ராணுவ வீரர்களும், உள்ளூர் நிர்வாகக் குழுக்களும் உடனே சம்பவ இ... மேலும் பார்க்க