செய்திகள் :

இரு விமானங்களின் இறக்கைகள் உரசிக்கொண்டு விபத்து - மும்பை விமான நிலையத்தில் திக் திக்.!

post image

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை மும்பையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. அந்நேரம் ஐதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ விமானம் பார்க்கிங் பகுதிக்கு சென்றது. அந்நேரம் இரண்டு விமானங்களும் ஒன்றையொன்று லேசாக உரசிக்கொண்டன. விமானங்களின் வலது இறக்கைகள் ஒன்றையொன்று உரசிக்கொண்டன. இதில் பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் விமானங்களின் இறக்கைகள் லேசாக சேதம் அடைந்தன. இரு விமானங்களும் பார்க்கிங் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், கோயம்புத்தூர் செல்ல வேண்டிய AI2732 விமானம் புறப்பட தயாராக இருந்தபோது இரு விமானங்களின் இறக்கைகள் ஒன்றோடொன்று உரசி சேதம் அடைந்தது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழில் நுட்ப சோதனைக்காக விமானம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டு வேறு விமானம் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பி விக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளது.

இதே போன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமும், விமானத்தின் இறக்கை மற்றொரு விமானத்துடன் உரசிக்கொண்டதை உறுதிபடுத்தி இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக லேசான சேதத்துடன் இரண்டு விமானங்களும் தப்பித்தன.

Ajit Pawar: 'நிறைவேறாத முதல்வர் கனவு; ஆட்சியைப் பிடித்த வாக்குறுதி' - யார் இந்த அஜித் பவார்?

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று அதிகாலை தனி விமானத்தில் தனது பாதுகாவலர்களுடன் தனது சொந்த ஊரான பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார்.விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பாராமதியில் விம... மேலும் பார்க்க

Ajit Pawar: துணை முதல்வர் பயணித்த விமானம் விபத்து! - சொந்த ஊரில் அஜித் பவார் உயிரிழந்த சோகம்

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (புதன்கிழமை) காலை மும்பையிலிருந்து பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். காலை சுமார் 8:45 மணியளவ... மேலும் பார்க்க

நாமக்கல்: அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்; நிகழ்விடத்தில் மூவர் பலியான சோகம்

நாமக்கல்லில் இருந்து சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று திருச்சி நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தது.நாமக்கல்-திருச்சி பிரதான சாலையில் ரமேஷ் தியேட்டர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்த... மேலும் பார்க்க

கோவை மாநகரை கரும்புகையால் மூழ்கடித்த தீ விபத்து; களமிறங்கிய ராணுவம்; தீயணைக்கப்பட்டது எப்படி?

கோவை காட்டூர் பகுதியில் வாகன உதிரி பாகங்கள் விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.மூன்று மாடி கட்டிடமான அதன் தரைத்தளத்திலிருந்து, மொட்டை மாடி வரை அனைத்து தள... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர்: விபத்துக்குள்ளான ராணுவ வாகனம்... 10 வீரர்கள் பலி, பலர் படுகாயம்! - விவரம் என்ன?

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் கானி டாப் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் ராணுவ வீரர்களும், உள்ளூர் நிர்வாகக் குழுக்களும் உடனே சம்பவ இ... மேலும் பார்க்க

கோவையில் 80 அடி உயரத்தில் பழுதான ரோலர் கோஸ்டர்! - 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு

கோவை கொடிசியா மைதானத்தில், தனியார் நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அங்கு செயற்கை நீருற்று மற்றும் பல்வேறு விதமான ராட்டினங்கள் வைக்கப்பட்டுள்ளன.கோவ... மேலும் பார்க்க