செய்திகள் :

”இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள்!” - ராஜேந்திர பாலாஜி

post image

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முந்தைய காங்கிரஸ் ஆட்சியைவிட பிரதமர் மோடி ஆட்சியில்தான் தமிழகத்துக்கு அதிக நிதி வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி கேட்ட அத்தனை திட்டங்களையும் பாரதிய ஜனதா அரசு வழங்கியது. பா.ஜ.கவிற்கு, அ.தி.மு.க. அடிமையாக இல்லை. நாங்கள் அவர்களோடு அன்போடுதான் இருக்கிறோம். இது மக்களுக்கும் தெரியும்.

ராஜேந்திர பாலாஜி

டெல்லி சென்றால் ஒரு மாதிரியும், சென்னைக்கு வந்தால் ஒரு மாதிரியும் இருப்பது நாங்கள் அல்ல. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிதான் அடிமைத்தனமான கூட்டணி. தேர்தல் குறித்து யார் கருத்து கூறினலும் அ.தி.மு.க. கூட்டணிதான் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்கிறார்கள். இதை பொறுக்க முடியாத சிலர் அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்கிறார்கள். ரூ.200 சினிமா டிக்கெட்டை ரூ.2 ஆயிரத்துக்கு விற்பதும் ஊழல்தானே? எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தார். ஆனால், அவர் அரசியலில் நடிக்கவில்லை.

இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள். இந்த நடிப்பை நிச்சயம் மக்கள் ஏற்க மாட்டார்கள். பட்டாசு, தீப்பெட்டித் தொழிலுக்கு பா.ஜ.க அரசு எதுவும் செய்யவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசிடம் பேசி ஜி.எஸ்.டி.யை குறைத்தோம். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை காப்பியடித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையாக வெளியிட்டது.

ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்னர் பொது மக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் கருத்து கேட்டு அதனை ஒருங்கிணைத்து எடப்பாடி பழனசாமி கவனத்துக்கு கொண்டு சென்று அதன் பின்னர் வெளியிடுவோம். தி.மு.க. ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் அதில் இருந்து தப்பிக்க, எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். வருங்காலங்களில் மக்களை தி.மு.க. ஏமாற்ற முடியாது. இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய தோல்வியை மக்கள் பரிசாகத் தருவார்கள்” என்றார்.

'ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் டு கல்விக்கடன் ரத்து' - 2ம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.இது ஒருபுறம் இருக்... மேலும் பார்க்க

``ராகுல் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?" - முதல்வர் ஸ்டாலின்

சீனா ஊடுருவல் குறித்தும் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த நரவானே சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆ டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த ... மேலும் பார்க்க

அன்றும் இன்றும் பரவும் தீ... இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும் | ‘வாவ்’ வியூகம் 04

இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும்‘வாவ்’ வியூகம் 04 ஜனநாயகத்தில் ‘போராட்டம்’ என்பது மிகப் பெரிய ஆயுதம். அதுவே அரசியல் என்று வரும்போது, அது கட்சிகளின் மாபெரும் சக்தி. சில போராட்டங்கள் மக்களுக்கு நன்... மேலும் பார்க்க

”பாஜகவின் கிளைக்கழகம் அதிமுக; சொல்வதை கேட்கும் கேட்பார் பிள்ளை” - மனோஜ் பாண்டியன் அட்டாக்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் `தமிழ்நாடு தலை குனியாது' என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீ... மேலும் பார்க்க

”தம்பி விஜய், கடைசி வரையில் ஆடிக்கொண்டுதான் இருக்கணும்!”- நயினார் நாகேந்திரன்

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பட்ஜெட்டை படித்து பார்க்காமல் பட்ஜெட் உள்ளே என்ன உள்ளது என்பதை ஆராய்... மேலும் பார்க்க