செய்திகள் :

'எங்க வீட்டுக்கு வாங்க' என்றழைத்த மோடி; கலைஞரின் எமோஷனல் பதில் - நினைவுக்கூர்ந்த ஜெகத்ரட்சகன்

post image

திருவள்ளூரில் நேற்று (பிப்.5) திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் கட்சி நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது அவர் பிரதமர் மோடி, கலைஞர் கருணாநிதி சந்திப்பின்போது நடந்த விஷயத்தை நினைவுக்கூர்ந்திருக்கிறார்.

மேடையில் பேசிய அவர், " தலைவர் கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது அவரைப் பார்க்க பிரதமர் மோடி வந்திருந்தார். நாங்கள் அங்கேயேதான் இருந்தோம்.

ஜெகத்ரட்சகன்
ஜெகத்ரட்சகன்

எங்களை வெளியே போக வேண்டாம் இங்கேயே இருங்கள் என கலைஞர் சொன்னார். அப்போது கலைஞரை நலம் விசாரித்த பிரதமர் மோடி கோபாலபுரம் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்.

பிறகு கலைஞரிடம், ' நீங்கள் எத்தனையோ தலைவர்களையும், பிரதமரையும், ஜனாநிதிபதியையும் உருவாக்கியிருக்கிறீர்கள்.

இவ்வளவு செல்வாக்கு படைத்த நீங்கள் இவ்வளவு சிறிய வீட்டில் இருக்கிறீர்கள். டெல்லியில் எனக்குப் பெரிய வீடு இருக்கிறது.

என் வீட்டுக்கு வாருங்கள்' என்று கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி அழைத்தார். ஆனால் 'எனக்கு 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்.

அதனால் உங்கள் வீடு பத்தாது' என கலைஞர் சிரித்துக்கொண்டே கூறிவிட்டார். அதனை கேட்டு நான் அசந்துவிட்டேன்" என நினைவுக்கூர்ந்திருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய ஜெகத்ரட்சகன், " சமீபத்தில் டெல்லிக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு முதலமைச்சர் என்னைப் பார்த்து, 'உங்கள் முதலமைச்சர் மிகப்பெரிய சாதனைகளைச் செய்கிறார்.

அவர் செய்கின்ற சாதனைகளை எல்லாம் பார்த்து நான் வியந்து போயிருக்கிறேன்' என அவர் சொன்னார்" என ஸ்டாலின் குறித்தும் புகழ்ந்திருக்கிறார்.

சென்னை: 'அரசுக்கு நன்றி; ஆனால் போராட்டம் தொடரும்!' - தூய்மைப் பணியாளர் போராட்டக்குழு

சென்னையில் தனியார்மயத்தை எதிர்த்து 150 நாள்களுக்கு மேலாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை மீண்டும் மாநகராட்சியின் ஒப்பந்தப் பணியாளர்களாகவே சேர்த்திருக்கிறது சென்னை மாநகராட்சி.கு.பாரதிஇது சம்பந்தமாக தூய்... மேலும் பார்க்க

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணையுமா? - அஜித் பவார் மனைவி, மகன்களை சந்தித்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித்பவார் கடந்த மாதம் 28ம் தேதி நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் துணைமு... மேலும் பார்க்க

`திருச்செந்தூர் தொகுதியை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது' - அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், ”தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் க... மேலும் பார்க்க

"எடப்பாடி பழனிசாமியின் தடுமாற்றமே அதிமுகவின் தோல்வி பயத்தை பறைசாற்றுகிறது" - செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார், “அதிமுக தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி இரண்டு கட்டங்களாக வெளியிட்டுள்ளார். பொதுவாக தேர்... மேலும் பார்க்க

India - US Trade Deal: 'இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy'' - எஸ்.ஜி சூர்யா | களம் 02

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க

`நிகிதாவையும் அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்' - மடப்புரம் அஜித்குமாரின் தாயார்

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ... மேலும் பார்க்க