3 உயிர்களைக் குடித்த கொரிய மோகம்; தந்தையின் மிரட்டல்.. முடிவுரை எழுதிய கேம்?- அத...
'எங்க வீட்டுக்கு வாங்க' என்றழைத்த மோடி; கலைஞரின் எமோஷனல் பதில் - நினைவுக்கூர்ந்த ஜெகத்ரட்சகன்
திருவள்ளூரில் நேற்று (பிப்.5) திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் கட்சி நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது அவர் பிரதமர் மோடி, கலைஞர் கருணாநிதி சந்திப்பின்போது நடந்த விஷயத்தை நினைவுக்கூர்ந்திருக்கிறார்.
மேடையில் பேசிய அவர், " தலைவர் கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது அவரைப் பார்க்க பிரதமர் மோடி வந்திருந்தார். நாங்கள் அங்கேயேதான் இருந்தோம்.

எங்களை வெளியே போக வேண்டாம் இங்கேயே இருங்கள் என கலைஞர் சொன்னார். அப்போது கலைஞரை நலம் விசாரித்த பிரதமர் மோடி கோபாலபுரம் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்.
பிறகு கலைஞரிடம், ' நீங்கள் எத்தனையோ தலைவர்களையும், பிரதமரையும், ஜனாநிதிபதியையும் உருவாக்கியிருக்கிறீர்கள்.
இவ்வளவு செல்வாக்கு படைத்த நீங்கள் இவ்வளவு சிறிய வீட்டில் இருக்கிறீர்கள். டெல்லியில் எனக்குப் பெரிய வீடு இருக்கிறது.
என் வீட்டுக்கு வாருங்கள்' என்று கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி அழைத்தார். ஆனால் 'எனக்கு 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்.
அதனால் உங்கள் வீடு பத்தாது' என கலைஞர் சிரித்துக்கொண்டே கூறிவிட்டார். அதனை கேட்டு நான் அசந்துவிட்டேன்" என நினைவுக்கூர்ந்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய ஜெகத்ரட்சகன், " சமீபத்தில் டெல்லிக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு முதலமைச்சர் என்னைப் பார்த்து, 'உங்கள் முதலமைச்சர் மிகப்பெரிய சாதனைகளைச் செய்கிறார்.
அவர் செய்கின்ற சாதனைகளை எல்லாம் பார்த்து நான் வியந்து போயிருக்கிறேன்' என அவர் சொன்னார்" என ஸ்டாலின் குறித்தும் புகழ்ந்திருக்கிறார்.













