செய்திகள் :

`என் ஆளுங்களுக்கு ஒரு மேடை; அதனால..!' - தவெக மேடையில் பாடி ஆடிய‌ வேல்முருகன் சொல்வது என்ன?

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மேடையில் பாடிய பாடகர் வேல்முருகன் மீது திருநெல்வேலி இந்து முன்னணியினர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர்.

விழா மேடையில் அரசியல் நோக்கத்துடன் முருகக் கடவுளை இழுத்துப் பாடியது இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டதாக அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இந்த விழாவில் அவர் பாட்டு பாடிய போது விஜய்யும் அவருடன் டான்ஸ் ஆடியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள்.

அதிமுகவின் ஜெயக்குமார் விஜய் டான்ஸ் ஆடியதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தவெக மேடையில் வேல்முருகன்
தவெக மேடையில் வேல்முருகன்

வேல்முருகன் பாடிய பாடலில் ' கொள்ளையடித்த கூட்டம்' என்பன போன்ற வார்த்தைகளெல்லாம் இடம் இருந்தது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பலவிதமான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

'வேல்முருகன் எல்லோருக்கும் பொதுவான சிறந்த நாட்டுப்புறப் பாடகர், அவர் இவர்களது அரசியலில் சிக்கியிருக்க கூடாது' எனச் சிலரும், 'வேல்முருகன் பாடியது சரியே, விஜய்க்கு இருக்கும் ஆதரவை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்' என தவெகவினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வேல்முருகனிடமே பேசினோம்.

``நான் எல்லோருக்கும் பொதுவான ஆள், பிரதமர் மோடி ஒரு மேடையில் என்னைக் கட்டிப் பிடித்தார். உதயநிதிக்கு 'வேணாம் மச்சான்' பாட்டு பாடியிருக்கேன். அதனால வம்பு வழக்கெல்லாம் எனக்கு எதுக்கு?

மூணாவது வருஷ தொடக்க விழானு கச்சேரிக்குக் கூப்பிட்டாங்க. என்னை நம்பி என் கூட இருக்கிறவங்களுக்கு பாட ஒரு மேடையும் நாலு காசும் கிடைக்கும்கிறதால போய் பாடினேன். நல்லா இருந்ததுன்னு சொன்னாங்க. மத்தபடி இது குறித்துப் பேசறதுக்கு எதுவுமில்லை" என முடித்துக் கொன்டார்.

காதலர் தினம்: புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீரிலீஸ் படங்கள்! - ஷார்ட் & ஸ்வீட் லுக்

காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான நாளாக மலர்கிறது. ஒரு நாள் முன்னதாக, பிப்ரவரி 13ல் அரை டஜன் நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகிறது. அதற்கு சவால் விடும் வகையில் ரீ ரிலீஸ்... மேலும் பார்க்க

மௌனம் பேசியதே: "என்னோட ஹீரோ சூர்யா சார் கூட நடிச்சது சந்தோஷமா இருந்துச்சு" - நடிகை லைலா

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மௌனம் பேசியதே'. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ... மேலும் பார்க்க

Kadhalar Dhinam: பரபரப்பான மும்பை ஸ்டேஷனில் ஷூட்; 1 கோடிக்கு செட் - 'காதலர் தினம்' பட சுவாரஸ்யங்கள்!

காதலர் தினத்தை முன்னிட்டு 'உயிருள்ளவரை உஷா', 'மௌனம் பேசியதே', 'மின்னலே', 'காதலர் தினம்' ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன. இதில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளிவந்த 'காதலர் தினம்' 90... மேலும் பார்க்க

Ponnambalam: "ஷூட்டிங் ஸ்பாட்ல குடிப்பேன்னு கதை சொல்லிட்டு இருக்காங்க!" - பொன்னம்பலம் பேட்டி

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற படங்களின் மூலம் ஸ்டண்ட்மேனாக சினிமாவுக்குள் வந்த நடிகர் பொன்னம்பலம், பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானார்.கடந்த சில வருடங்க... மேலும் பார்க்க