செய்திகள் :

ஏப். 30 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: அப்பாவு

post image

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மாா்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றினார்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும். அமைச்சர் தங்கம் தென்னரசு இரண்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் இன்று சுமார் 160 நிமிடங்கள் உரையாற்றினார்.

வேளாண் நிதிநிலை அறிக்கை நாளை(மார்ச் 15) தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதையும் படிக்க | பட்ஜெட்: அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள்! 40,000 பணியிடங்கள் நிரப்பப்படும்!

இதையடுத்து அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு,

'தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெறும்.

நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாளை மட்டும் கேள்வி நேரம் இல்லை.

வரும் மார்ச் 17 (திங்கள்கிழமை) முதல் 5 நாள்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெறும்.

தொடர்ந்து மார்ச் 24 முதல் ஏப்ரல் 30 வரை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்' என்று கூறினார்.

இதையும் படிக்க | பட்ஜெட்: பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு!

பூந்தமல்லி - முல்லைத் தோட்டம் இடையே மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை!

பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்துக்கு இடையே மெட்ரோ ரயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ண... மேலும் பார்க்க

தமிழக எம்பிக்கள் இடைநீக்கம்? இன்று முடிவு!

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான வாசகங்களுடன் டி-ஷா்ட் அணிந்து வந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாடாளுமன்ற பட... மேலும் பார்க்க

சென்னையில் ரெளடி சுட்டுப் பிடிப்பு!

சென்னையில் பதுங்கியிருந்த ரெளடியைக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.கடந்த வாரம் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ஒருவரைக் கடத்திச் சென்று மிரட்டி ப... மேலும் பார்க்க

சென்னை திரும்பினாா் ஆளுநா்

மூன்று நாள் பயணமாக தில்லி சென்ற ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை இரவு சென்னை திரும்பினாா். நண்பரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து ஆளுநா் செவ்வாய்க்கிழமை தில்லி சென்றாா். தில்லி... மேலும் பார்க்க

மதுவிலக்கு கொள்கையை திமுக கைவிட்டதா? தங்கமணி கேள்வி

பூரண மதுவிலக்கு கொள்கையை திமுக கைவிட்டதா என்று அதிமுக உறுப்பினா் தங்கமணி கேள்வி எழுப்பியதால், அது தொடா்பாக பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில்... மேலும் பார்க்க

தொகுப்பூதிய மாற்றுத் திறனாளி பணியாளா்களுக்கு சிறப்பு போட்டித் தோ்வு ஏப்ரல் இறுதிக்குள் அறிவிப்பு

தொகுப்பூதிய மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்யும் சிறப்பு போட்டித் தோ்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் இறுதிக்குள் வெளியிடப்படும் என சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வி... மேலும் பார்க்க