செய்திகள் :

ஏழை பெண்களே குறி; ஆடம்பர வாழ்க்கை ஆசை - பாலியல் வதை.. மதமாற்றம்? - சிக்கிய சகோதரிகளின் பகீர் பின்னணி

post image

மத்திய பிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்த 21 மற்றும் 32 வயது பெண்கள் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், தங்களை சகோதரிகள் இரண்டு பேர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். அதோடு தாங்கள் வேலை வாய்ப்பு, தங்கும் இடம் தருவதாகக் கூறப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அப்பெண்கள் இரண்டு பேரும் கொடுத்திருந்த புகார்கள் ஒரே மாதிரி இருந்ததால் அக்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அம்ரீன், அஃப்ரீன் மற்றும் அவர்களது கூட்டாளி சந்தன் ஆகியோரைப் பிடித்துச் சென்று போலீஸார் விசாரித்தனர்.

போலீஸாரின் விசாரணையில் சமீப காலம் வரை இரண்டு சகோதரிகளும் குடிசைப்பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

ஆனால் சமீபத்தில் ஆடம்பர பங்களாவில் குடியேறியுள்ளனர். மேலும் இரண்டு பேரும் சமுதாயத்தில் பொருளாதார ரீதியில் பின் தங்கிய நிலையில் இருக்கும் பெண்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறுவது வழக்கம். மாதம் ரூபாய் பத்து ஆயிரத்தில் வீட்டு வேலை பெற்றுத் தருவதாகவும், தங்குமிடம், உணவு இலவசம் என்றும், ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என்றும் ஆசை வார்த்தை கூறி, நம்பிக்கை ஏற்படுத்தி இருந்தனர்.

புகார் கொடுத்த இரு பெண்களையும் சகோதரிகள் இரண்டு பேரும் படிப்படியாக பார்ட்டி, பப்களுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தனர். அதோடு பணக்கார ஆண்களிடம் பழகும்படி கூறி இருக்கின்றனர். மேலும் மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், பல சந்தர்ப்பங்களில் பாலியல் தாக்குதல் நடத்தியதாக அப்பெண்கள் தெரிவித்துள்ளனர். புகார் கொடுத்தவர்களில் சத்தீஷ்கரைச் சேர்ந்த ஒரு பெண் பியூட்டிஷியனாக இருக்கிறார்.

அவரை வேலை என்று கூறி அகமதாபாத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அம்ரீன் உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இது தவிர அம்ரீன் கூட்டாளிகள் பிலால் மற்றும் சந்து ஆகியோரும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

கட்டாய மதமாற்றம்?

இரண்டாவதாக புகார் கொடுத்துள்ள பெண் போபாலைச் சேர்ந்தவர். அவர் அம்ரீன் வீட்டில் வீட்டு வேலை செய்தார். அவரை சந்தன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். எதிர்ப்பு தெரிவித்ததற்கு கொலை செய்துவிடுவதாக மிரட்டி இருக்கிறார். அதோடு இரண்டு பெண்களையும் முஸ்லிம் மதத்திற்கு மாற்றியுள்ளனர். ஒரு பெண் கொடுத்துள்ள புகாரில், தன்னை வசதியான குடும்பத்தில் திருமணம் செய்து கொடுப்பதாகக் கூறி, மதமாற்றம் செய்து பர்தா அணியும்படி கட்டாயப்படுத்தினர் என்று தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் வேலையைவிட்டு செல்வதாகச் சொல்லும்போது அவர்களின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை காட்டி மிரட்டி இருக்கின்றனர். போலீஸார் குற்றச்சாட்டுக்குள்ளான சகோதரிகள் இரண்டு பேரையும் கைதுசெய்துள்ளனர். இது தவிர சந்தன் என்பவரையும் கைதுசெய்துள்ளனர். அவர்களது கூட்டாளிகள் பிலால், சந்து மற்றும் யாசீர் ஆகியோர் தலைமறைவாக இருக்கின்றனர். அம்ரீன் மொபைல் போனில் பல பெண்களின் புகைப்படங்கள் இருக்கிறது. அவர்களை கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்தினார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நீட் தேர்வு எழுதக் கட்டாயப்படுத்திய தந்தை; கொன்று உடலைத் துண்டுத் துண்டாக்கிய மகன் சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் மன்வேந்திர சிங் (49). தொழிலதிபரான இவரது மகன் அக்‌ஷத் பிரதாப் சிங்(21). மன்வேந்திர சிங் தனது மகனிடம் மருத்துவம் படிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்காக நீட் தே... மேலும் பார்க்க

எல் மென்ச்சோ: `காதலால் வீழ்ந்த மெக்சிக்கோ போதைப் பொருள் கடத்தல் மன்னன்' - காட்டிக்கொடுத்த காதலி

மெக்சிக்கோவில் அமெரிக்காவில் தேடப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மென்ச்சோ இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையை தொடர்ந்து நாடு முழுவதும் வன்... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு; பத்திரப்பதிவு எழுத்தர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கரம்!

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள ஆணையப்பபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர், மூலைக்கரைப்பட்டியில் பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வந்தார். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளைப... மேலும் பார்க்க

ஒரு தலை காதல்; வீடு புகுந்து இரட்டை கொலை செய்த இளைஞர் - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம், நெகமம் அருகே உள்ளகொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. மெக்கானிக் வேலை செய்கிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவியும்,18 வயது மற்றும் 16 வயதில் 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மாணவரை சாதி ரீதியாக தாக்கிய 5 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், முதலூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி ... மேலும் பார்க்க

கூல்டிரிங்க்ஸ் குடிப்பது போல் வந்து குழந்தையை கடத்திச் சென்ற தம்பதி - 20 நிமிடங்களில் மீட்ட போலீஸார்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி, முத்துச்செல்வி. இத்தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வருகின்றனர்.... மேலும் பார்க்க