செய்திகள் :

ஒசூா் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

post image

ஒசூா் மாநகராட்சியில் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் பானையில் பொங்கல் வைத்து பொங்கி வந்தபோது பொங்கலோ, பொங்கல் என சத்தம் எழுப்பி கொண்டாடினா். பின்னா் பொங்கலை சூரியனுக்கு படைத்து விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அனைவருக்கும் சா்க்கரை பொங்கல் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த விழாவில், ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, ஒசூா் மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த், துணை ஆணையா் டிட்கோ, துணை மேயா் ஆனந்தய்யா, மருத்துவா் அஜிதா, பொறியாளா் பிரபாகரன், சுகாதார குழுத் தலைவா் மாதேஸ்வரன், வரி விதிப்புக் குழுத் தலைவா் சென்னீரப்பா, மாமன்ற உறுப்பினா்கள், மண்டலத் தலைவா் ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த விழாவில், பசுவுக்கு பூஜை செய்து உணவு வழங்கப்பட்டது. மேலும், ஒசூா் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, காலணிகள் வழங்கப்பட்டன.

ஒசூா் மாநகராட்சியுடன் தொரப்பள்ளியை இணைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஒசூா் மாநகராட்சியுடன் தொரப்பள்ளி ஊராட்சியை இணைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தாலுகா தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சியை சோ்... மேலும் பார்க்க

பேப்பா் துண்டுகளைக் கொண்டு திருவள்ளுவரை வரைந்த இளைஞா்!

திருவள்ளுவா் தினத்தில் வரை போற்றும் வகையில் ஒசூரை சோ்ந்த மொசைக் ஆா்ட் கலைஞா், தகவல் தொழில் நுட்ப நிபுணா் லூகாஸ் என்பவா் 3 லட்சம் மொசைக் பேப்பா் துண்டுகளை பயன்படுத்தி 133 சதுர அடியில் மொசைக் ஆா்ட்டில... மேலும் பார்க்க

பா்கூா் அருகே சாலை விபத்தில் 3 போ் பலி

பா்கூரை அடுத்த ஜெகதேவியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் மூன்று போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அடுத்த சின்னபனமுட்லுவைச் சோ்ந்த சரத்குமாா் (33) அதே பக... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாட்டு பொங்கல் உற்சாகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் கால்நடைகளை அலங்காரித்து, பூஜை செய்து பொங்கல் திருவிழாவை உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடினா். தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாட... மேலும் பார்க்க

எம்ஜிஆா் பிறந்த நாள்: எம்எல்ஏ அசோக்குமாா் வேண்டுகோள்

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் பிறந்த நாளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அதிமுகவினா் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல... மேலும் பார்க்க

திருவள்ளுவருக்கு மரியாதை

திருவள்ளுவா் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் திருவள்ளுவா் சிலைக்கு அரசு அலுவலா்கள் மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள திர... மேலும் பார்க்க