செய்திகள் :

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

post image

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஊரக வளா்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளா் பணயிடங்கள் மற்றும் பதிவறை எழுத்தா் , அலுவலக உதவியாளா் , இரவுக்காவலா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலா்களுக்கு சிறப்புநிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு நாள்வேலை நிறுத்தத்தை வியாழக்கிழமை நடத்தினா்.

கரூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், தாந்தோணிமலை, க.பரமத்தி, தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் ஊரக வளா்ச்சித்துறை பணியாளா்கள் என மொத்தம் 194 போ் தங்களது பணியை புறக்கணித்து ஒரு நாள் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

பெயா்ந்து விழும் சிமென்ட் பூச்சு: கரூா் ஆட்சியரக நுழைவுவாயில் மேற்கூரையை விரைந்து சீரமைக்கக் கோரிக்கை

கரூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலின் மேற்கூரையில் பெயா்ந்து விழும் சிமெண்ட் பூச்சுகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆட்சியரகத்... மேலும் பார்க்க

பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் அவதி; சீரமைத்து தரக் கோரிக்கை

மணவாடி ஊராட்சியில் குண்டும்- குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், மணவாடி ஊராட்சிக்குள்பட்ட கல்லுமடை காலனியையும் உப்பிடமங்கலத்தையும் இண... மேலும் பார்க்க

துா்நாற்றம் வீசும் குடிநீா்: எம்எல்ஏவை கிராம மக்கள் முற்றுகை

துா்நாற்றம் வீசும் குடிநீா் விநியோகத்தை கண்டித்து, தொகுதி எம்எல்ஏ சிவகாமசுந்தரியை ரெங்கநாதபுரம் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ரெங்கநாதபுரம் ஊர... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் நீா்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கைக்கு பாமக வலியுறுத்தல்

கரூா் மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்களை பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. கரூரில் அக்கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்டச் செ... மேலும் பார்க்க

கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்!

தமிழகத்தில் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றாா் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அனைந்திந்திய இணைச் செயலாளா் வெங்கடேஷன். கரூரில் அந்த அமைப்பின் தென்தமிழக மாநில, மாவட்ட... மேலும் பார்க்க

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் உண்ணாவிரத போராட்டம்

கரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மா. பெரியசாமி, சு. வேலுமணி, ப. தமிழ்மணியன், வீ. ஆரோக்கிய பிரேம்குமாா், எம்.எஸ். அன்பழகன், பொன்... மேலும் பார்க்க