செய்திகள் :

தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 74 லட்சம் மோசடி; பிஆர்ஓ மீது 3 பிரிவுகளில் வழக்கு

post image

தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 48). இவரது மகன் சூரியநாராயணன் பிஇ படித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்திக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பி.ஆர்.ஒ-வாகப் பணியாற்றிய சண்முகசுந்தரம், அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.

அப்போது சண்முகசுந்தரம், தனக்கு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளைத் தெரியும் என்றும், பணம் கொடுத்தால் உங்களுடைய மகனுக்கும் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்றும் சாந்தியிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பிய சாந்தி கடந்த 09.09.2021 முதல் 10.11.2021 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு தவணைகளாக சண்முகசுந்தரம் தம்பதியிடம் 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

இதேபோல் வேலை வாங்கித் தருவதாகக் கூறி செல்லத்தம்பி என்பவரிடம் ரூ. 4 லட்சம், பவித்ராவிடம் ரூ. 4 லட்சம், பழனிக்குமாரிடம் ரூ. 12 லட்சம் மற்றும் முத்துப்பாண்டியிடம் ரூ. 4 லட்சம் வாங்கி மொத்தம் 74 லட்சம் ரூபாயை அந்தத் தம்பதி வசூலித்துள்ளனர்.

FRAUD
FRAUD

பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித் தராததால் இது குறித்து சண்முகசுந்தரத்திடம் கேட்டபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாந்தி, உடனே தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

அவரது உத்தரவின் பேரில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள தம்பதியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சண்முகசுந்தரம் தற்போது சேலம் போக்குவரத்துக் கழக பி.ஆர்.ஒ-வாக வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ... மேலும் பார்க்க

மசூதி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்: போராட்டம், கல்வீச்சில் ஈடுபட்ட மக்கள் - டெல்லியில் நிலவிய பதற்றம்!

டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு அருகில் உள்ள சையத் ஃபைஸ் எலாஹி மசூதிக்கு அருகில் உள்ள நிலத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ... மேலும் பார்க்க

'பனை மரத்துக்கு லஞ்சம்' - அலையவிட்ட கிராம நிர்வாக அலுவலர்; கொத்தாகத் தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம் புதுப்புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (40). விவசாயியான இவர், தனது நிலத்திலிருந்த 6 பனை மரங்களை அனுமதியின்றி வெட்டியுள்ளார். இதுதொடர்பாக, செந்தில் ... மேலும் பார்க்க

தென்காசி: 3 ஆண்டுகளாக கோழிப்பண்ணையில் இயங்கிய வெடிமருந்து குடோன்; சிறுவனால் சிக்கியது எப்படி?

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுவன் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்துள்ளார்.அப்போது, அச்சிறுவனின் வாகனத்தை நிறுத்தி போலீஸார் விசாரணை ... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: திருட வந்த இடத்தில் எக்ஸாஸ் பேன் துளையில் சிக்கிக் கொண்ட நபர்; மீட்டுக் கைதுசெய்த போலீஸ்!

ராஜஸ்தான் மாநிலம், கோடா என்ற இடத்தில் வசிப்பவர் சுபாஷ் குமார். இவர் சம்பவத்தன்று வெளியில் சென்று இருந்தார். அவரின் மனைவியும் வெளியில் சென்றுவிட்டு அதிகாலை ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வெ... மேலும் பார்க்க

தாறுமாறாக ஓடிய கார் - கோவை அவிநாசி சாலையை அலறவிட்ட போதை ஆசாமி

கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகேநேற்றுஇரவு நேரம் சொகுசுகார் ஒன்றுஅதிவேகமாக சென்றுள்ளது. தாறுமாறாககட்டுப்பாடு இல்லாமல் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது. மக்கள் எச்சரித்தும் கேட்காமல் அந்த கார் அச்சுற... மேலும் பார்க்க