Jana Nayagan: ஒத்திவைக்கப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!
விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' பொங்கல் ரிலீஸாக ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்கள்.
ஆனால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்கு தாமதமானதால் படக்குழு நீதிமன்றத்தை நாடியிருந்தது. நேற்று மதியம் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் ஜனவரி 9-ம் தேதி தீர்ப்பளிக்க உள்ளதாக நீதிபதி பி.டி. ஆஷா அறிவித்திருந்தார்.
இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படும் எனப் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் அன்பார்ந்த பங்குதாரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தச் செய்தியை மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு, எங்களால் கட்டுப்படுத்த முடியாத தவிர்க்க முடியாத சூழல்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம்.
இந்த முடிவு எங்களில் எவருக்கும் எளிதானதல்ல. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
உங்களது அசைக்க முடியாத ஆதரவே 'ஜனநாயகன்' குழுவினருக்கு மிகப்பெரிய பலமாகவும், எல்லாவற்றுக்கும் மேலானதாகவும் இருக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறது.



















