செய்திகள் :

நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!

post image

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ மணிகண்டன் என்பவர் கறிக்கோழிக் கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு செல்வ மணிகண்டன், ராம்குமாரிடம் வாடகைக்கு டேபிள், சேர் கேட்டுள்ளார். ஆனால், ராம்குமார் கொடுக்க மறுத்துள்ளார்.

வீர்வநல்லூர்

இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து செல்வ மணிகண்டன் தன்னுடைய நண்பரான கவுதம் என்பவரிடம் கூறியுள்ளாராம். இதனையடுத்து கவுதம், இருவரையும் சமாதானப்படுத்துவதுபோல் நடித்து ராம்குமாரை குற்றாலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். உடன் செல்வ மணிகண்டனும், 17 வயது சிறுவனும் சென்றுள்ளனர். குற்றாலம் பராசக்தி நகரில் அவர்கள் 4 பேரும் வீடு எடுத்து தங்கியுள்ளனர். அங்கு 4 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது டேபிள், சேர் வாடகைக்கு தராதது குறித்துக் கேட்டு ராம்குமாரிடம் செல்வ மணிகண்டன் தகராறு செய்துள்ளார்.

அப்போது செல்வ மணிகண்டன், கவுதம் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் ராம்குமாரை சரமாரியாகத் தாக்கி, கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலைசெய்துள்ளனர். இதற்கிடையில், ராம்குமாரை கவுதம் பைக்கில் அழைத்துச் சென்றதை அறிந்த அவரின் மனைவி உஷா ராணி மற்றும் உறவினர்கள்... அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். ராம்குமாரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், அவர் குற்றாலத்தில் உள்ள வீடு போன்ற விடுதியில் இருப்பது தெரியவந்ததும், அவரைத் தேடி அங்கு சென்றுள்ளனர்.

வீரவநல்லூர் காவல் நிலையம்

அந்த வீட்டில் சோதனையிட்டதில், கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு அறையில் கவுதம், செல்வ மணிகண்டன் மற்றும், 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று பேரிடம் விசாரணை செய்ததில் ராம்குமாரைக் கொலைசெய்ததை ஒப்புக் கொண்டனர். டேபிள், சேர் வாடகைக்குத் தராததால் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு... மேலும் பார்க்க

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' - 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி:`இன்ஸ்டாவில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது' - சமாதானம் பேச அழைத்து காதலியை கொன்ற காதலன்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் உமா. இவர், தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சிப்பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் திருவேங்கடம் அ... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு - கார் வாங்குவது போல் வரவழைத்து வியாபரி கொலை செய்யபட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஸ்டான்லி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த ... மேலும் பார்க்க

மும்பை தேர்தலில் மிரட்டல், படுகொலை: சேனா வேட்பாளருக்கு கத்திக்குத்து, எதிர்க்கட்சி நிர்வாகி படுகொலை!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணி, சிவசேனா(உத்தவ்) கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் ... மேலும் பார்க்க

மசூதி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்: போராட்டம், கல்வீச்சில் ஈடுபட்ட மக்கள் - டெல்லியில் நிலவிய பதற்றம்!

டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு அருகில் உள்ள சையத் ஃபைஸ் எலாஹி மசூதிக்கு அருகில் உள்ள நிலத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ... மேலும் பார்க்க