செய்திகள் :

மும்பை தேர்தலில் மிரட்டல், படுகொலை: சேனா வேட்பாளருக்கு கத்திக்குத்து, எதிர்க்கட்சி நிர்வாகி படுகொலை!

post image

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணி, சிவசேனா(உத்தவ்) கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் மும்பை பாந்த்ரா பகுதியில் சிவசேனா(ஷிண்டே) சார்பாக ஹாஜி சலீம் குரேஷி போட்டியிடுகிறார். அவர் கட்சி தொண்டர்களோடு சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஹாஜி சலீம் குரேஷியை கத்தியால் குத்தினார். இரண்டு அல்லது மூன்று முறை குத்திவிட்டு கூட்டத்தில் மறைந்துவிட்டார். ஹாஜி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அவரை அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

போலீஸார் இது குறித்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தாக்குதல் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஹாஜியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஹாஜி சலீம் இதற்கு முன்பு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியில் இருந்தார். அவரது மனைவி முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

ஆனால் அவர்கள் இரண்டு பேரும் கடந்த ஆண்டு சிவசேனா(ஷிண்டே)வில் சேர்ந்து விட்டனர். இத்தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வேட்பு மனுவை திரும்ப பெற வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு எதிர்க்கட்சிகளின் வேட்பு மனுவை திட்டமிட்டு தள்ளுபடி செய்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து. இதனால் 59 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள்னர்.

காங்கிரஸ் நிர்வாகி படுகொலை

பட்டேல்

மகாராஷ்டிரா காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ஹிதாயத் பட்டேல் மர்ம நபரால் மசூதிக்கு வெளியில் கத்தியால் குத்தப்பட்டார். அகோலா மாவட்டத்தில் உள்ள மொஹலா என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பட்டேல் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. பட்டேல் இறுதிச்சடங்கில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று வேட்புமனுவை திரும்ப பெறுவது தொடர்பான தகராறில் சோலாப்பூரில் நவநிர்மாண் சேனா மாணவரணி தலைவர் பாலாசாஹேப் படுகொலை குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முன்னாள் கவுன்சிலர் உட்பட 5 பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு... மேலும் பார்க்க

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' - 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி:`இன்ஸ்டாவில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது' - சமாதானம் பேச அழைத்து காதலியை கொன்ற காதலன்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் உமா. இவர், தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சிப்பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் திருவேங்கடம் அ... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு - கார் வாங்குவது போல் வரவழைத்து வியாபரி கொலை செய்யபட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஸ்டான்லி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த ... மேலும் பார்க்க

நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ... மேலும் பார்க்க

மசூதி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்: போராட்டம், கல்வீச்சில் ஈடுபட்ட மக்கள் - டெல்லியில் நிலவிய பதற்றம்!

டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு அருகில் உள்ள சையத் ஃபைஸ் எலாஹி மசூதிக்கு அருகில் உள்ள நிலத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ... மேலும் பார்க்க