செய்திகள் :

நெல்லை: திருமணம் மீறிய உறவு - கார் வாங்குவது போல் வரவழைத்து வியாபரி கொலை செய்யபட்ட கொடூரம்!

post image

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஸ்டான்லி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம், சீவலப்பேரி தோணித்துறை சுடுகாட்டுப் பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சீவலப்பேரி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சீவலப்பேரி

மார்ட்டின் ஸ்டான்லியின் உடல் அருகில் மது பாட்டில்கள் கிடந்ததால், நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் முதல் கட்ட விசாரணையை தொடங்கினர். இச்சம்பவம் தொடர்பாக முருகப்பெருமாள், நம்பிராஜன், கிதியோன் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில், நம்பிராஜன் என்பவர் ஸ்டான்லியின் நண்பர். இவர்தான் கார் வாங்குவது தொடர்பாக பேச வேண்டும் என மார்ட்டின் ஸ்டான்லியை சீவலப்பேரிக்கு வரச் சொல்லியுள்ளார். கைதான மூன்று பேரும், “மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்தோம்” எனக்கூறி போலீஸாரை திசை திருப்பினர்.

ஆனால், விசாரணையில் அவர்கள் கூறிய முன்னுக்குப் பின்னான தகவலால் சந்தேகமடைந்த போலீஸார், விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், ஏமன்குளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் மார்ட்டின் ஸ்டான்லிக்கு திருமணம் மீறிய உறவு இருந்து வந்துள்ளது. பழக்கத்தை கைவிடுமாறு அந்தப் பெண்ணின் சகோதரர் பலமுறை ஸ்டான்லியிடம்  கூறியும், அவர் பழக்கத்தை கைவிட மறுத்துள்ளார். இதனால், ஸ்டான்லியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

சீவலப்பேரி காவல் நிலையம்

அவரது தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் மார்ட்டின் ஸ்டான்லியை கார் வாங்குவது போல நாங்குநேரி அருகில் வரவழைத்துள்ளனர். அடித்துக் கொலை செய்துள்ளனர். கொலையை மறைப்பதற்காகவும் போலீஸாரை திசை திருப்பவும் அவரது சடலத்தை சீவலப்பேரி சுடுகாட்டுப் பகுதியில் போட்டுவிட்டு, அவரது உடலின் அருகில் மதுபாட்டில்களை சிதறவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமான அந்த இளம்பெண்ணின் சகோதரரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு... மேலும் பார்க்க

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' - 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி:`இன்ஸ்டாவில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது' - சமாதானம் பேச அழைத்து காதலியை கொன்ற காதலன்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் உமா. இவர், தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சிப்பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் திருவேங்கடம் அ... மேலும் பார்க்க

மும்பை தேர்தலில் மிரட்டல், படுகொலை: சேனா வேட்பாளருக்கு கத்திக்குத்து, எதிர்க்கட்சி நிர்வாகி படுகொலை!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணி, சிவசேனா(உத்தவ்) கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் ... மேலும் பார்க்க

நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ... மேலும் பார்க்க

மசூதி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்: போராட்டம், கல்வீச்சில் ஈடுபட்ட மக்கள் - டெல்லியில் நிலவிய பதற்றம்!

டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு அருகில் உள்ள சையத் ஃபைஸ் எலாஹி மசூதிக்கு அருகில் உள்ள நிலத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ... மேலும் பார்க்க