செய்திகள் :

தென்காசி: 3 ஆண்டுகளாக கோழிப்பண்ணையில் இயங்கிய வெடிமருந்து குடோன்; சிறுவனால் சிக்கியது எப்படி?

post image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுவன் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்துள்ளார்.

அப்போது, அச்சிறுவனின் வாகனத்தை நிறுத்தி போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீஸார், சிறுவன் வைத்திருந்த பார்சலைப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதில், வெடிமருந்து இருந்துள்ளது.

இதுகுறித்து அச்சிறுவனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சேர்ந்தமரம் அருகிலுள்ள ஒரு கோழிப்பண்ணை வெடிமருந்து குடோன் செயல்படுவதாகக் கூறியுள்ளான்.

சேந்தமரம்
சேந்தமரம்

தொடர்ந்து பொய்கையிலிருந்து கரடிகுளம் செல்லும் சாலையில் இடைகாலைச் சேர்ந்த ஒரு நபருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் சோதனை நடத்தியுள்ளனர். அதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தனிப்பிரிவு போலீஸார், தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு வெடிமருந்துகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன.

தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் 3 ஆண்டுகளாக அனுமதியில்லாமல் கோழிப்பண்ணையில் வெடிமருந்து பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதும், சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரித்ததும் தெரியவந்தன.

இதனையடுத்து போலீஸார், கோழிப்பண்ணைக்குச் சீல் வைத்தனர். அத்துடன் வெடிமருந்து குடோன் நடத்தி வந்தவரைத் தேடி வருகின்றனர்.

சேர்ந்தமரம் காவல்நிலையம்

ஒதுக்குப்புறமாக உள்ள இது போன்ற பண்ணைகளில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது சோதனை நடத்த வேண்டும், தனிப்பிரிவு போலீஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அதே போல இப்பகுதிகளில் இரவு நேரங்களில் முகமுடி அணிந்த கொள்ளையர்கள் கொள்ளைச் சம்பவங்களிலும், தெருவிளக்கு எரியாத சாலைகளில் வழிப்பறியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு... மேலும் பார்க்க

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' - 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி:`இன்ஸ்டாவில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது' - சமாதானம் பேச அழைத்து காதலியை கொன்ற காதலன்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் உமா. இவர், தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சிப்பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் திருவேங்கடம் அ... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு - கார் வாங்குவது போல் வரவழைத்து வியாபரி கொலை செய்யபட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஸ்டான்லி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த ... மேலும் பார்க்க

மும்பை தேர்தலில் மிரட்டல், படுகொலை: சேனா வேட்பாளருக்கு கத்திக்குத்து, எதிர்க்கட்சி நிர்வாகி படுகொலை!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணி, சிவசேனா(உத்தவ்) கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் ... மேலும் பார்க்க

நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ... மேலும் பார்க்க