செய்திகள் :

மரணத்தை வென்ற மனிதம்; விற்று தீர்ந்த 50 டன் சர்க்கரைக் கிழங்கு - மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்!

post image

ஒரு தனிமனிதனின் துயரம் எப்படி ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியாக மாறி, ஓர் உயிரைக் காப்பாற்றியது என்பதற்கு, சீனாவில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

தன் மனைவியின் உயிரைக் காக்கப் போராடிய ஜா சாங்லாங் (Zha Changlong) என்பவருக்கு, 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகள் எப்படி வரப்பிரசாதமாக அமைந்தன என்பதைப் பார்ப்போம்.

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த ஜா சாங்லாங் மற்றும் யான் யிங் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால், யான் யிங்கிற்கு ஏற்பட்ட ரத்தப் புற்றுநோய் (Acute Leukemia) அவர்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியது. அவரது முதற்கட்ட சிகிச்சைக்காக ஜா தன்னிடம் இருந்த அனைத்தையும் செலவு செய்தார். ஆனாலும், எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அதிக அளவு பணம் தேவைப்பட்டது. கையில் பணமின்றி, செய்வதறியாது திகைத்த ஜா, "என் மகளுக்குத் தன் தாயின் அன்பு கிடைக்க வேண்டும். அவளைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள்" என்று கண்ணீருடன் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தார்.

மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்!

ஜாவின் நிலைமையை அறிந்த 'ஃபாங்' என்ற கொடையாளர், அவருக்கு உதவ முன்வந்தார். ஆனால் அவர் பணமாகத் தராமல், சுமார் 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை ஜாவிற்கு வழங்கினார். "இதை விற்று உன் மனைவியின் மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்திக்கொள்" என்று அவர் கூறியபோது, 50,000 கிலோ கிழங்குகளை எப்படி விற்பது என்ற சவால் ஜா முன் எழுந்தது.

இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதும், ஜினான் (Jinan) நகரின் மக்கள் மனிதாபிமானத்துடன் ஒன்று திரண்டனர். தன்னார்வலர்கள், மாணவர்கள் எனப் பலரும் ஜாவிற்கு உதவ முன்வந்தனர். வெறும் சில நாள்களில் 50 டன் கிழங்குகளும் விற்றுத் தீர்ந்தன. பலர் சந்தை விலையை விட அதிகப் பணம் கொடுத்து கிழங்குகளை வாங்கினர். இதன் மூலம் சுமார் 1.8 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) நிதி திரட்டப்பட்டது. இது அவரின் மனைவியின் அறுவை சிகிச்சைக்குத் தேவையான தொகையை விட அதிகமாக இருந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன் மனைவியின் உயிரைக் காப்பாற்றிய ஜா, தன்னிடம் இருந்த உபரிப் பணத்தை, கஷ்டப்படும் மற்ற புற்றுநோய் நோயாளிகளுக்குத் தானமாக வழங்கினார். "அன்பு என்பது பகிரப்படும்போது தான் முழுமையடைகிறது" என்பதை நிரூபித்த இந்தச் சம்பவம், இன்றும் பலருக்கு நம்பிக்கையூட்டும் கதையாகத் திகழ்கிறது.

10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை; மகள்களின் பெயர்களை தந்தை மறந்து தவித்த வீடியோ வைரல்!

ஹரியானாவில் ஒரு தம்பதிக்குத் தொடர்ச்சியாக 10 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அங்குள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் உஷனா என்ற இடத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்(38). இவருக்குத் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின... மேலும் பார்க்க

Maduro: புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் பக்தர்; இந்தியாவுடனான வெனிசுலா அதிபரின் ஆன்மிக தொடர்பு!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவர் மனைவி சிலியா புளோரஸ் தம்பதியை அமெரிக்க படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தி சிறைபிடித்துச் சென்றுள்ளன. தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ரூ.5 கோடி மோசடி புகார்; மனைவியுடன் தேனிலவுக்கு சென்ற பிக் பாஸ் பிரபலம் மும்பை விமான நிலையத்தில் கைது

பிக் பாஸ் பிரபலமான ஜெய் துதானே, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தனது நீண்ட நாள் காதலி ஹர்ஷலா பாட்டீலை திருமணம் செய்து கொண்டார். அவர் தனது மனைவி, சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோருடன் தேனிலவுக்கு ... மேலும் பார்க்க

'ஓர் ஆண்டு வாழ்க்கை; 10 ஆண்டுக்கால வழக்கு; ரூ.1000 கோடி ஜீவனாம்சம்' - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெய்தேவ் ஷெராப்பிற்குக் கடந்த 2004ம் ஆண்டு பூனம் என்பவருடன் திருமணம் நடந்தது. இத்திருமணம் ஓர் ஆண்டு கூட நிலைக்கவில்லை.2005ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். 2015ம் ஆண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தலில் பணம், அதிகாரபலம்? - தேர்தல் நடக்கும் முன்பே பா.ஜ.க கூட்டணி 66 இடங்களில் வெற்றி

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலைதான் வெளியானது. அதேசமயம் தேர்தல் நடக்கும் முன்பு பா.ஜ.க மற்றும் அ... மேலும் பார்க்க

மருமகளை வரவேற்க தயாராகும் பிரியங்கா காந்தி - ரைஹானுக்கு நீண்டகால காதல் தோழியுடன் நிச்சயதார்த்தம்!

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வதேரா தம்பதியின் மகன் ரைஹான் வதேராவிற்கு அவரது நீண்ட கால தோழி அவிவா பைக் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்ப... மேலும் பார்க்க