செய்திகள் :

10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை; மகள்களின் பெயர்களை தந்தை மறந்து தவித்த வீடியோ வைரல்!

post image

ஹரியானாவில் ஒரு தம்பதிக்குத் தொடர்ச்சியாக 10 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அங்குள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் உஷனா என்ற இடத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்(38). இவருக்குத் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின்றன. இத்தம்பதிக்குத் தொடர்ச்சியாக 10 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

கூலித் தொழிலாளரான சஞ்சய் குமார் எப்படியும் தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் தொடர்ச்சியாக தனது மனைவியிடம் குழந்தை பெற்றுக்கொள்ளும்படி கூறினார்.

அவர்களது தேடல் மூலம் வீட்டில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கைதான் அதிகரித்துக்கொண்டே சென்றது.

கடைசியாக சஞ்சய் குமாரின் மனைவி தனது 37வது வயதில் மீண்டும் கர்ப்பமானார். டாக்டர்கள் மேற்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று எச்சரித்தும் அப்பெண் மீண்டும் கர்ப்பமானார்.

அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அடுத்த நாளே ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையைப் பார்த்த பிறகுதான் கணவன் - மனைவி இருவருக்கும் நிம்மதி வந்தது.

அப்பெண்ணிற்குப் பிரசவம் பார்த்த டாக்டர் நர்வீர் இது குறித்து கூறுகையில், ''இது மிகவும் ஆபத்தான பிரசவமாக இருந்தது. பெண்ணிற்கு ரத்தம் தேவைப்பட்டது. எனவே 3 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது. இப்போது தாயும், குழந்தையும் நலமாக இருக்கின்றனர்'' என்று தெரிவித்தார்.

இது குறித்து சஞ்சய் குமார் கூறுகையில், ''எனது மூத்த மகள் தனக்கு சகோதரன் வேண்டும் என்று விரும்பினார். நானும் மகன் பிறப்பான் என்று நம்பினேன். எனது மகள்கள் அனைவரும் பள்ளியில் படிக்கின்றனர்.

எனது மூத்த மகள் 12வது வகுப்பு படிக்கிறாள். எனது வருமானம் குறைவு என்றாலும் நான் அனைவரையும் படிக்க வைக்கிறேன். இது எங்களுக்கு 11வது குழந்தை. எங்களுக்கு ஏற்கனவே 10 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். எல்லாம் கடவுள் விருப்பப்படி நடக்கிறது. அதில் எனக்கு மகிழ்ச்சிதான்'' என்றார்.

சஞ்சய் குமார் தனது மகள்களின் பெயரை நினைவுபடுத்திக் கூப்பிட முடியாமல் திணறிய காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் இத்தம்பதியைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மரணத்தை வென்ற மனிதம்; விற்று தீர்ந்த 50 டன் சர்க்கரைக் கிழங்கு - மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்!

ஒரு தனிமனிதனின் துயரம் எப்படி ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியாக மாறி, ஓர் உயிரைக் காப்பாற்றியது என்பதற்கு, சீனாவில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். தன் மனைவியின் உயிரைக் காக்கப் போர... மேலும் பார்க்க

Maduro: புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் பக்தர்; இந்தியாவுடனான வெனிசுலா அதிபரின் ஆன்மிக தொடர்பு!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவர் மனைவி சிலியா புளோரஸ் தம்பதியை அமெரிக்க படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தி சிறைபிடித்துச் சென்றுள்ளன. தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ரூ.5 கோடி மோசடி புகார்; மனைவியுடன் தேனிலவுக்கு சென்ற பிக் பாஸ் பிரபலம் மும்பை விமான நிலையத்தில் கைது

பிக் பாஸ் பிரபலமான ஜெய் துதானே, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தனது நீண்ட நாள் காதலி ஹர்ஷலா பாட்டீலை திருமணம் செய்து கொண்டார். அவர் தனது மனைவி, சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோருடன் தேனிலவுக்கு ... மேலும் பார்க்க

'ஓர் ஆண்டு வாழ்க்கை; 10 ஆண்டுக்கால வழக்கு; ரூ.1000 கோடி ஜீவனாம்சம்' - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெய்தேவ் ஷெராப்பிற்குக் கடந்த 2004ம் ஆண்டு பூனம் என்பவருடன் திருமணம் நடந்தது. இத்திருமணம் ஓர் ஆண்டு கூட நிலைக்கவில்லை.2005ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். 2015ம் ஆண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தலில் பணம், அதிகாரபலம்? - தேர்தல் நடக்கும் முன்பே பா.ஜ.க கூட்டணி 66 இடங்களில் வெற்றி

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலைதான் வெளியானது. அதேசமயம் தேர்தல் நடக்கும் முன்பு பா.ஜ.க மற்றும் அ... மேலும் பார்க்க

மருமகளை வரவேற்க தயாராகும் பிரியங்கா காந்தி - ரைஹானுக்கு நீண்டகால காதல் தோழியுடன் நிச்சயதார்த்தம்!

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வதேரா தம்பதியின் மகன் ரைஹான் வதேராவிற்கு அவரது நீண்ட கால தோழி அவிவா பைக் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்ப... மேலும் பார்க்க