செய்திகள் :

ராஜஸ்தான்: திருட வந்த இடத்தில் எக்ஸாஸ் பேன் துளையில் சிக்கிக் கொண்ட நபர்; மீட்டுக் கைதுசெய்த போலீஸ்!

post image

ராஜஸ்தான் மாநிலம், கோடா என்ற இடத்தில் வசிப்பவர் சுபாஷ் குமார். இவர் சம்பவத்தன்று வெளியில் சென்று இருந்தார். அவரின் மனைவியும் வெளியில் சென்றுவிட்டு அதிகாலை ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வெளியில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. சுஷாஷ் குமார் மனைவி வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்றபோது, சமையல் அறையில் திருடன் ஒருவன் மாட்டி இருந்தான். சமையல் அறையில் எக்ஸாஸ் பேன் மாட்டுவதற்காக துளை ஒன்று போடப்பட்டு இருந்தது.

அந்த துளையில் திருடன் ஒருவன் பாதி உடல் வீட்டிற்குள் வந்த நிலையில் வெளியேயும் செல்ல முடியாமல் உள்ளேயும் செல்ல முடியாமல் திரைப்படத்தில் வருவது போன்று அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தான். உடனே சுபாஷ் குமார் மனைவி பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அத்திருடனை துளையில் இருந்து பத்திரமாக மீட்டு, கைதுசெய்தனர்.

பிடிபட்ட திருடனுடன் வேறு ஒரு நபரும் வந்துள்ளார். இந்த திருடன் துளையில் சிக்கிக் கொண்டதால் அவரை மீட்க தப்பியோடிய நபர் முயற்சி செய்துள்ளார். ஆனால் மீட்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். திருடர்கள் இரண்டு பேரும் யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்துள்ளனர்.

காரை வெளியில் நிறுத்திவிட்டு மெயின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுள்ளனர். உள்ளே இருந்த வீட்டுக் கதவை திறந்த முடியாத காரணத்தால் சமையல் அறை வழியாக வீட்டிற்குள் செல்ல முடிவு செய்து, ஒரு திருடனை மற்றொரு திருடன் மேலே ஏற்றிவிட்டு இருக்கிறான் என்பது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. தப்பியோடிய திருடனை போலீஸார் தேடி வருகின்றனர். திருடன் எக்ஸாஸ் பேன் துளையில் சிக்கிக்கொண்டு திண்டாடும் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.

நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ... மேலும் பார்க்க

மசூதி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்: போராட்டம், கல்வீச்சில் ஈடுபட்ட மக்கள் - டெல்லியில் நிலவிய பதற்றம்!

டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு அருகில் உள்ள சையத் ஃபைஸ் எலாஹி மசூதிக்கு அருகில் உள்ள நிலத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ... மேலும் பார்க்க

'பனை மரத்துக்கு லஞ்சம்' - அலையவிட்ட கிராம நிர்வாக அலுவலர்; கொத்தாகத் தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம் புதுப்புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (40). விவசாயியான இவர், தனது நிலத்திலிருந்த 6 பனை மரங்களை அனுமதியின்றி வெட்டியுள்ளார். இதுதொடர்பாக, செந்தில் ... மேலும் பார்க்க

தென்காசி: 3 ஆண்டுகளாக கோழிப்பண்ணையில் இயங்கிய வெடிமருந்து குடோன்; சிறுவனால் சிக்கியது எப்படி?

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுவன் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்துள்ளார்.அப்போது, அச்சிறுவனின் வாகனத்தை நிறுத்தி போலீஸார் விசாரணை ... மேலும் பார்க்க

தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 74 லட்சம் மோசடி; பிஆர்ஓ மீது 3 பிரிவுகளில் வழக்கு

தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 48). இவரது மகன் சூரியநாராயணன் பிஇ படித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்த... மேலும் பார்க்க

தாறுமாறாக ஓடிய கார் - கோவை அவிநாசி சாலையை அலறவிட்ட போதை ஆசாமி

கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகேநேற்றுஇரவு நேரம் சொகுசுகார் ஒன்றுஅதிவேகமாக சென்றுள்ளது. தாறுமாறாககட்டுப்பாடு இல்லாமல் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது. மக்கள் எச்சரித்தும் கேட்காமல் அந்த கார் அச்சுற... மேலும் பார்க்க