செய்திகள் :

`காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்' - தமிழக அரசு

post image

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்களையும், மது பாட்டில்களையும் துாக்கி வீசுவதால் வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இதை தடுக்கும் விதமாக, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில், 10 ரூபாயை திருப்பி தரும் வகையிலான திட்டத்தை அமல்படுத்தும்படி, சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது.

டாஸ்மாக்

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் மூன்று மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த திட்டத்தை முழுமையாக மாற்றியமைக்க இருப்பதாகவும், காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் பணியில் டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் என குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதிகள், `காலி பாட்டில்களை திரும்பப்பெறும் வகையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கும்போது, அதை ரசீதில் குறிப்பிட வேண்டும் என்றும், 10 ரூபாய் கூடுதலாய் வசூலிப்பது என்பது வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணத்தை வசூலிப்பதற்கான உரிமமாக எடுத்துக்கொள்ளக் கூடாது' என தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், `இந்த அரசு ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது' என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பாக 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், மாற்றியமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் வழக்கை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ரூ.634 கோடி லஞ்ச விவகாரம்: `கே.என் நேரு மீது ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு' - ஹைகோர்ட்டில் தமிழக அரசு

முந்தைய திமுக ஆட்சி காலத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவி... மேலும் பார்க்க

“கேரளாவில் இருப்பதால் உயிரோடு இருக்கிறோம்” - மோனாலிசா வழக்கில் உயர் நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்

கும்பமேளா மூலம் சமூக ஊடகங்களில் பிரபலமான மோனாலிசா போஸ்லே மற்றும் அவரது கணவர் முகமது ஃபர்மான் கான் ஆகியோர் தங்களின் கலப்புத் திருமணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர... மேலும் பார்க்க

`சுய விருப்பத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமல்ல; காவல்துறை அவர்களை..!' - உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் மனிதக் கடத்தலைத் தடுக்கவும், வணிக ரீதியான பாலியல் சுரண்டலை ஒடுக்கவும் 'இம்மோரல் டிராஃபிக் (தடுப்பு) சட்டம்' நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்தச் சட்டத்தின் விதிகள் (குறிப்பாகப் பிரிவு 17) காவ... மேலும் பார்க்க

செட்டிநாடு: ரூ.800 கோடி முறைகேடு? – கருப்பன் செட்டிக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு!

செட்டிநாடு குடும்பத்தைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் மீனா முத்தையா மறைவுக்கு பின்னர், அவரது நெருங்கிய பணியாளரான கே.டி.ஆர். ராஜா கருப்பன் செட்டி எனும் கருப்பையா மீது எழுந்துள்ள ₹800 கோடி நித... மேலும் பார்க்க

`கை, கால்களை வெட்டினால்தான் சட்டத்தை மதிப்பார்கள்' - கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்

பெங்களூரை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மணிப்பாலில் கைதான மாணவர் அவருடன் சேர்ந்து படிக... மேலும் பார்க்க

மேகதாது: `எந்த முகாந்திரமும் இல்லை'- தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரி நீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து தமிழக அரசுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய... மேலும் பார்க்க