செய்திகள் :

கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -இபிஎஸ்

post image

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை:

சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ‘கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

"அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை" என்று பெண் பாதுகாப்பு மீதான பொறுப்புடன் நான் சுட்டிக்காட்டிய போது, "எடப்பாடி பழனிசாமி பீதியைக் கிளப்புகிறார்" என்று சொன்ன அமைச்சர்கள், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

அரசுப்பள்ளி மாணவிக்கு, தான் படிக்கும் பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்கின்ற செயல், திமுக அரசே இக்கொடுரமானச் செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு திமுக அரசு தலைகுனிய வேண்டும். பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

போச்சம்பள்ளி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்காடு கோடை விழா: 2 லட்சம் மலர் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரம்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 48-வது மலர் கண்காட்சிக்கான ஆரம்ப பணிகளைத் தோட்டக்கலைத் துறையினர் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றாக உள்ளது ஏற்காடு. இங்கு வரு... மேலும் பார்க்க

மீனவர்கள் உள்கட்டமைப்பு வசதி: ரூ. 360 கோடி ஒதுக்கீடு!

தங்கச்சிமடம் மீன் இறங்கு தளம் மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துகால் மீன் இறங்குதளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்துதல் மற்றும் பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய உ... மேலும் பார்க்க

கோவையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 மாணவர்கள் கைது!

கோவை: கோவையில் சமூக வலைத்தளத்தில் பேசிப் பழகி, சிறுமியை அறைக்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோவையில் தனியார் கல்லூரி மாணவர்... மேலும் பார்க்க

தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? தவெக கேள்வி!

தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்று பாஜகவுக்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது.மும்மொழி கொள்கைக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தவெக தலைவர் வி... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்புக்காக திமுக அரசு ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை: அண்ணாமலை

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று (பிப். 24) அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப். 24 அன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப். 24 (திங்கள்கிழமை) ... மேலும் பார்க்க