செய்திகள் :

கீழடி: தொல்லியல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தயாரித்த ஆய்வறிக்கை; ASI-யை நாடி வெளியிட தமிழக அரசு முடிவா?

post image

தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ள கீழடி அகழாய்வு இறுதி அறிக்கை மூன்றரை ஆண்டுகளாக வெளியிடப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், அதை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் (ASI) தமிழகத் தொல்லியல் துறை கோரிக்கை விடுக்க முடிவு செய்துள்ளது.

கீழடி நாகரீகத்தின் தொன்மை மற்றும் வளர்ச்சி குறித்த ஆய்வு முடிவுகளை உள்ளடக்கிய அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் சமர்ப்பித்திருந்தார். ஆனால், கீழடியின் தொன்மையை உறுதிப்படுத்தும் வகையில் போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால், அந்த அறிக்கையை ஏற்று வெளியிட மத்திய அரசு மறுத்ததாகக் கூறப்படுகிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில், கட்டுமான அடுக்குகள் மற்றும் கரிம பகுப்பாய்வு (Carbon Analysis) முடிவுகளின் அடிப்படையில் கீழடி நகரம் கி.மு. 500-ஆம் ஆண்டளவில் உருவானதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கி.மு. 5-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வரை கீழடி நகர நாகரீகம் செழிப்புடன் விளங்கியதாகவும், அதன் பின்னர் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்குள் நகரம் படிப்படியாக நலிவடைந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கீழடி
கீழடி

இந்த அறிக்கை வெளியிடப்பட்டால் தமிழர் நாகரீகத்தின் தொன்மை மற்றும் நகரமயமான வாழ்க்கை முறையின் வரலாற்றுப் பின்னணி குறித்து முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று தமிழக தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.

இதனிடையே, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கீழடி அகழாய்வு அறிக்கையை விரைவாக வெளியிட வேண்டுமென மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை வைக்க தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழனி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தைப் பதிவு செய்தது நானா? - சார்பதிவாளர் ஜஸ்டின் சொல்வது என்ன?

பழனி தண்டாயுதபாணி கோவிலுக்குச் சொந்தமான 1 ஏக்கர் 40 செண்ட் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ய முயன்ற வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிமண்டன், நிலத்தை விற்ற முருகதாஸ், வாங்கிய வெள்ளதுரை சேதுபதி ஆகியோ... மேலும் பார்க்க

"தற்போது குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில்..." - காவலர் தேர்வு தள்ளிவைப்புக்கு உதயநிதி கண்டனம்

தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு தள்ளி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினின் பதிவு..."தமிழ்... மேலும் பார்க்க

"பாஜக-வும் திமுக-வும் ஒருபோதும் ஒன்றாக இணைய முடியாது; ஏனென்றால்..." - ஜெயராம் ரமேஷின் விளக்கம் என்ன?

திமுகவும், பாஜகவும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என்கிற செய்தி தொடர்ந்து அடிபட்டு வருகிறது. காங்கிரஸுடன் கடும் அதிருப்தியில் இருக்கும் திமுக, கடந்த மாதம் டெல்லியில் நடந்த இந்தியாக் கூட... மேலும் பார்க்க

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க