செய்திகள் :

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

post image

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி  தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதற்கு முன்னதாக கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெற்ற போது, முதலமைச்சர் விஜய் புகைப்படம் மட்டுமின்றி முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் வைக்க வேண்டும் என தி.மு.க-வினரும், காமராஜர் புகைப்படமும் வைக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படம்
முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படம்

இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. பின்னர் அரசு அலுவலகங்களில் முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படம் வைக்க அரசு ஆணை இருப்பதாகக் கூறி, ஆணையர் இருக்கை அருகே ஸ்டாலின் புகைப்படம் மட்டும் வைக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் வைக்க வேண்டும் என அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதேபோல பல்வேறு பகுதிகளிலும் அரசு அலுவலகங்களில் முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படங்கள் வைப்பது தொடர்பாகப் பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன.

முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படம்
முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படம்

இந்த நிலையில் இன்று நடந்த மாமன்றக் கூட்டத்தின்போது முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படப் பிரச்னைகளைத் தவிர்க்கும் வகையில், முன்னாள் முதலமைச்சர்கள் பலரின் புகைப்படங்களும் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டு இருந்தன.

முதலமைச்சர் விஜய் புகைப்படத்தின் அருகே முன்னாள் முதலமைச்சர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி புகைப்படமும், வலப்புற சுவரில் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களும், இடப்புற சுவரில் ஓமந்தூர் ராமசாமி, காமராஜர், பக்தவச்சலம், ராஜாஜி மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

அதேசமயம் முன்னாள் முதலமைச்சர்கள் ஜானகியம்மாள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் படங்கள் இடம்பெறவில்லை. முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படம் வைக்கும் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது.

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க

'நித்யானந்தாவின் கைலாசாவோடு தவெக அரசு ராஜாங்கரீதியான உறவா?' - விவரம் என்ன?

நிநித்யானந்தாவின் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் தவெக அரசின் அமைச்சர்களை சந்தித்து ராஜாங்கரீதியான உறவுகள் குறித்து விவாதித்ததாக நித்யானந்தா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.நித்யானந்தாஇ... மேலும் பார்க்க