செய்திகள் :

'நித்யானந்தாவின் கைலாசாவோடு தவெக அரசு ராஜாங்கரீதியான உறவா?' - விவரம் என்ன?

post image

நிநித்யானந்தாவின் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் தவெக அரசின் அமைச்சர்களை சந்தித்து ராஜாங்கரீதியான உறவுகள் குறித்து விவாதித்ததாக நித்யானந்தா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

நித்யானந்தா
நித்யானந்தா

இதுதொடர்பான அந்த பதிவில், 'கைலாசா நாட்டின் ஆன்மீக பிரதிநிதிகள் தமிழக அரசின் அமைச்சர்களை சந்தித்து முறைப்படி ராஜாங்கரீதியான உறவுகள் குறித்து ஆலோசித்தனர். இந்த சந்திப்பின் போது சுவாமி நித்யானந்தா எழுதிய கைலாசாவின் வரலாற்று புத்தகத்தை அமைச்சர்களுக்கு பரிசாக அளித்தோம்.

இந்த புத்தகம் சனாதன தர்மத்தின் மீட்சிக்கும் அதை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும். பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோருக்கு இந்த புத்தகத்தை வழங்கினோம்' எனக் கூறியிருக்கிறார்.

லோகேஷ்
ஸ்ரீநாத்

இதுதொடர்பாக கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம், 'நித்யானந்தா சொல்வதைப் போல எந்த அரசாங்கரீதியான சந்திப்புகளும் நடக்கவில்லை. தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் எனும் சூழலே உள்ளது. அப்படி மனு கொடுக்க அமைச்சர்களை சந்திப்பதை போல வந்துதான் புத்தகத்தை கொடுத்து படம் எடுத்திருக்கின்றனர். வெளியில் அதை எதோ ராஜாங்கரீதியான ஆலோசனை என்பதை போல சித்தரிக்கின்றனர். இவர்களுக்கு இதே வேலையாக போய்விட்டது. கட்சி பேதமின்றி எல்லா கட்சியின் கூட்டங்களும் புத்தகத்தோடு போய் நிற்கிறார்கள். எதாவது முக்கியஸ்தர்களை சந்திக்க முடிந்தால் அவர்களுடன் படமெடுத்து அதை தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்' என்றனர்.

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க

திருவான்மியூர் – உத்தண்டி ECR உயர்மட்ட சாலை திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்ப குழு அமைக்க முடிவு!

சென்னை: சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) திட்டமிடப்பட்டுள்ள திருவான்மியூர்–உத்தண்டி உயர்மட்ட சாலை (Elevated Corridor) திட்டத்தின் செலவினை குறைக்கும் நோக்கில் தொழில்நுட்ப குழு அமைக்க தமிழ்நா... மேலும் பார்க்க

``அமெரிக்கா தேர்தலில் சீனா தலையிட்டிருக்கிறது" - ரகசிய ஆவணத்தை வெளியிட்ட அதிபர் ட்ரம்ப்

அமெரிக்கத் தேர்தல் பாதுகாப்பு விவகாரங்களில் சீனாவின் தலையீடு இருப்பதாகக் கூறி, அதிபர் ட்ரம்ப் சில உளவுத்துறை ஆவணங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் சீனா எந்தவொ... மேலும் பார்க்க

"ரெண்டு சீட் வெச்சிக்கிட்டு இவ்ளோ ஆட்டமானு கேட்குறாங்க, ஆனா..!” - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுகவை மறைமுகமாக சாடியிருக்கிறார். " 'இரண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு இவ்வளவு ஆட்டமானு கேக்குறாங்க'... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிக்க திட்டமா?' - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 'ரெஸ்டோ பார்' எனப்படும் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் உள்ளன. இதேபோல, தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களை அனுமதிப்பது குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக த... மேலும் பார்க்க