செய்திகள் :

'12 மாவட்ட அரசுப் பள்ளிகள் சேதம்' - ஆய்வு செய்து சரிசெய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

post image

புதுக்கோட்டை மாவட்டம் வல்லாதிரக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, “விருதுநகர், திருச்சி, நெல்லை, திண்டுக்கல், கரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்ட அரசுப் பள்ளி கட்டிடங்க சேதங்கள், தேவைகள் தொடர்பாக தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கட்டிடங்களில் சேதம் இருப்பது உறுதியாகி உள்ளது.

வகுப்பறை, சமையலறை, கழிவறை, சுற்றுச்சுவர், குடிநீர் வசதி போன்றவை பல பள்ளிகளுக்குத் தேவையாக உள்ளன. பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் சேதமடைந்த நிலையில் இருப்பதால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளை அவ்வப்போது ஆய்வு செய்து அவை தரமானதாகவும் சுத்தமானதாகவும் இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும். பருவமழை தொடங்க உள்ளதால் சேதமடைந்த பள்ளிகளின் கட்டிடங்கள், சுற்றுசுவர்கள், கழிவறை, சமையலறை ஆகியவற்றை குறுகிய காலத்தில் கட்டி முடிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்

இடியும் நிலையில் பள்ளிக் கட்டடங்கள்
இடியும் நிலையில் பள்ளிக் கட்டடங்கள்

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபகள் பிறப்பித்த உத்தரவில், “12 மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியையும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் நேரடியாக ஆய்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்.

மேலும் சுகாதாரம், தூய்மை மற்றும் பிற அடிப்படை வசதிகள் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து அறிக்கைகளைப் பெற்று அவற்றை தொகுத்து முதன்மைகல்வி அதிகாரிகள் இந்த நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அதிலும் குறிப்பாக குடிநீர், வடிகால் வசதி, பள்ளியைச் சுற்றி புதர்கள் அல்லது களைகள் உள்ளனவா? என்பன தொடர்பான விபரங்களுடன் ஆகஸ்ட் 24 ஆம் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்.

உத்தரவு

மேலும் கண்டறியப்படும் குறைபாடுகளில் உடனே சரி செய்யப்பட வேண்டிய தேவை இருப்பின், நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருக்காமல் தலைமை கல்வி அலுவலர்கள் தேவையான பணிகளை மேற்கொண்டு அவற்றைச் சரி செய்து அது தொடர்பான அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

பள்ளிகளைத் தூய்மையாகப் பராமரிக்க தற்காலிக தூய்மைப் பணியாளர்களை நியமிக்க சாத்திய கூறுகள் உள்ளதா என்பது குறித்தும் தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ரூ.1,024 கோடி மதிப்பீட்டில் மதுரை ரிங் ரோடு திறப்பு; நகர போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு | Album

1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில்... மேலும் பார்க்க

தரையில் அமரும் பயணிகள்; மூக்கை பிடிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடு- பெரம்பலூர் பேருந்து நிலைய அவலம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாணவர்கள், பணிக்குச் செல்வோர், ஊர்களுக்குச் செல்வோர் என தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்தப் பேருந்து ... மேலும் பார்க்க

`லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம்' - வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியிருக்கும் தமிழ்நாடு அரசு!

தமிழக அரசு ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கோரினால், அதுகுறித்து 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு செய்தி அனுப்பி இனி பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.ஊழலை ஒழிப்பதற்காகத் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை... மேலும் பார்க்க

தமிழகத்தில் அதிவிரைவு சாலைகள் அமைக்க திட்டம்; விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் உருவாக்க உத்தரவு

தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அதிவிரைவு சாலைகள் (Expressways) அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், மாநிலத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்... மேலும் பார்க்க

``ரூ. 104 கோடி மதிப்பிலான 1.27 கோடி படுக்கை விரிப்புகள் திருட்டு" - இந்திய ரயில்வே தகவல்

இந்திய ரயில்வேயின் ஏசி வகுப்புகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் பெட்ஷீட்கள், துண்டுகள், தலையணை உறைகள் மற்றும் போர்வைகள் போன்ற படுக்கை விரிப்பு பொருட்கள் பெருமளவில் திருடப்பட்டு வருவது தகவல் அறியும் உரிமை... மேலும் பார்க்க

சாதியும் ஆணவமும் நம் பிள்ளைகளைக் கொலை செய்வதைத் தடுப்போம்!

இலக்கியத்திலும் சினிமாக்களிலும் காதலைக் கொண்டாடுகிற நம் சமூகம், எதார்த்தத்தில் அதற்கு எதிராகவே செயல்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாள்களில் மட்டும் காதலித்த குற்றத்துக்காக பல இளம் உயிர்கள் பறிபோயுள்... மேலும் பார்க்க