செய்திகள் :

தமிழகத்தில் அதிவிரைவு சாலைகள் அமைக்க திட்டம்; விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் உருவாக்க உத்தரவு

post image

தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அதிவிரைவு சாலைகள் (Expressways) அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், மாநிலத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் தனி செயல் திட்டத்தை உருவாக்கவும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் விஜய்

சென்னையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் இன்னும் அதிவிரைவு சாலைகள் போதுமான அளவில் உருவாக்கப்படாததற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள் மற்றும் நகரமயமாதலை கருத்தில் கொண்டு, அதிவிரைவு சாலைகள் அமைப்பதற்கான விரிவான திட்டத்தை விரைந்து தயாரிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துகள் நடைபெற்று வருவதால், அவற்றை கணிசமாகக் குறைக்கும் நோக்கில் தனி செயல்திட்டம் ஒன்றை உருவாக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளை அடையாளம் காணுதல், சாலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல், விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு முறைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் இந்தத் திட்டத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சாலை

அதேபோல், நகர்புற வளர்ச்சி மற்றும் எதிர்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான 10 ஆண்டுகால தொலைநோக்கு செயல்திட்டத்தையும் தயாரிக்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் தொகை அதிகரிப்பு, புதிய குடியிருப்பு மற்றும் தொழில் மையங்களின் உருவாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சாலை வசதிகளை திட்டமிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நெடுஞ்சாலைகள், நகர்ப்புற இணைப்புச் சாலைகள் மற்றும் அதிவிரைவு சாலை திட்டங்கள் மூலம் மாநிலத்தின் போக்குவரத்து திறனை மேம்படுத்தி, பயண நேரத்தைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் ஊக்கத்தை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

``ரூ. 104 கோடி மதிப்பிலான 1.27 கோடி படுக்கை விரிப்புகள் திருட்டு" - இந்திய ரயில்வே தகவல்

இந்திய ரயில்வேயின் ஏசி வகுப்புகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் பெட்ஷீட்கள், துண்டுகள், தலையணை உறைகள் மற்றும் போர்வைகள் போன்ற படுக்கை விரிப்பு பொருட்கள் பெருமளவில் திருடப்பட்டு வருவது தகவல் அறியும் உரிமை... மேலும் பார்க்க

சாதியும் ஆணவமும் நம் பிள்ளைகளைக் கொலை செய்வதைத் தடுப்போம்!

இலக்கியத்திலும் சினிமாக்களிலும் காதலைக் கொண்டாடுகிற நம் சமூகம், எதார்த்தத்தில் அதற்கு எதிராகவே செயல்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாள்களில் மட்டும் காதலித்த குற்றத்துக்காக பல இளம் உயிர்கள் பறிபோயுள்... மேலும் பார்க்க

விகடன் செய்தி எதிரொலி: பயன்பாட்டுக்கு வந்த பூம்புகார் கடற்கரை கழிவறை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் பகுதியானது வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகும். இங்கு கடற்கரை மட்டுமன்றி, இரட்டைக் காப்பியங்களைப் பறைசாற்றும் சிலப்பதிகார கலைக்கூடமும் இடம்பெற்றுள்ளது.... மேலும் பார்க்க

``எழுத்தாளர் பூமணியின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை" - முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கிய ஆளுமையும், சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான பூமணி (79), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் காலமானார்.கரிசல் ம... மேலும் பார்க்க

ITR Filing சீசன் இது; இன்னும் ஆதார் - பான் எண்ணை இணைக்கவில்லையா? என்ன, எப்படி செய்யலாம்? | How to

ஆதார் கார்டும், பான் கார்டும் இணைக்க வேண்டும். அப்படியில்லை என்றால், பான் கார்டு செல்லாது என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த வலியுறுத்தல் எப்போது முக்கியமோ, இல்லையோ, இப்போது இதை கட... மேலும் பார்க்க

PF: ரூ.5 லட்சத்திற்கு Auto settlement, 75% பணம் எடுக்கலாம், கூடுதல் வட்டி - EPFO புது அப்டேட் லிஸ்ட்

சமீபத்தில் வருங்கால வைப்பு நிதி வலைதளம் மற்றும் அதன் ஆப்பான UMANG அப்டேட் செய்யப்பட்டது. இந்த அப்டேட் மூலம் என்னென்ன விஷயங்கள் எளிதாக்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம்...> புதிய CITES திட... மேலும் பார்க்க