செய்திகள் :

குதப்பி: `அரசை விமர்சித்தால் அனுமதி மறுப்பதா?'- புத்தக வெளியீட்டில் ஆதங்கப்பட்ட அமீர்!

post image

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், எழுத்தாளர் ம.காமுத்துரை எழுதிய “குதப்பி” நாவல் வெளியீட்டு விழா நடந்தது.

திரைப் பிரபலங்கள், இலக்கிய ஆளுமைகள், அரசியல் பிரமுகர்கள், வாசகர்கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்நாவலின், கதையைத் தழுவி “குக்கர்” எனும் திரைப்படத்தை இயக்குநர் கரு.பழனியப்பன் இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேனி மாவட்டத்தின் சமையல்காரர் குழுவொன்றின் தொழில் வாழ்க்கையை சுவாரசியமான வட்டார மொழியில் விவரித்துச் செல்கிறது நாவல்.

இந்நிகழ்வில், வரவேற்புரை ஆற்றிய நாவலாசிரியர் ம.காமுத்துரை நாவலின் கதைச் சம்பவங்களையும் அதன் பின்னணியையும் பேசுகையில் நெகிழ்ந்துப் போனார்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இயக்குநர் கரு.பழனியப்பனுக்கு தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து, நடிகர் காளிவெங்கட், இயக்குநர்கள் ஏ.வெங்கடேசு, சுப்பிரமணிய சிவா, அமீர் ஆகியோர் பேசினர். அத்துடன், பாடலாசிரியர் யுகபாரதி, பாடகர் அலெக்சாண்டர் பாபு, நடிகை சங்கீதா உள்ளிட்டவர்களும் “ குதப்பி”நாவல் வாசிப்பனுபவம் பற்றியும் கரு.பழனிப்பன் உடனான உறவையும் பகிர்ந்தனர்.

நடிகர் காளிவெங்கட்டும், நடிகை சங்கீதாவும் “குக்கர்” படத்தில் முதன்மை கதாபாத்திரங்களாக நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேசிய ஒவ்வொருவரும் ஒரே போல் “குக்கர்” திரைப்படம் மீதான தங்களது எதிர்பார்ப்புகளையும் ஆர்வங்களையும் வெளிப்படுத்தினர்.

நிகழ்வில் பேசிய, இயக்குநர் அமீர், சில நாட்களுக்கு முன்பு, இதே, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தவெக அரசை விமர்சித்து தான் பேசியதற்காக, இனிவரும் நாட்களில் அமீர் விருந்தினராக அழைக்கப்பட்டால் நிகழ்ச்சிக்கு அனுமதியில்லையென அரசு தரப்பில் ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

திரைப்படத்திலும் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளிலும் பொதுவெளியிலும் அரசியல் பேசி பேசி ஆட்சிக்கு வந்தவர்கள், அரசியல் பேசக் கூடாது என அழுத்தம் தருவது நகைப்பு என தவெக அரசை குத்தலாக விமர்சித்தார்.

ஆகையால், அரசியல் பேசுவதை தவிர்ப்பதாகக் கூறி, இயக்குநர் கரு.பழனிப்பன் ஆளுமையையும் அவரது திறமையையும் முன்வைத்து தனது பேச்சை அமைத்துக்கொண்டார்.

இத்தனை காலமும் திரைத்துறையில் ஆர்வம் காட்டாமல், தான் நம்பிய அரசியலை ஆதாயமில்லாமல் பேசிவந்தார் கரு.பழனியப்பன். அதனால், அவர் பெற்றது எதுவுமில்லை இழந்தது ஏராளம் என்றும் கூறினார் இயக்குநர் அமீர்.

- இராகுல் லட்சுமி

டிவி சீரியல் அலையைத் தாண்டி தியேட்டருக்குக் கூட்டம் சேர்த்த 'பூவே உனக்காக'!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

The Odyssey: இந்தியா வரும் நோலன், மாட் டேமன், டாம் ஹாலண்ட் - ரசிகர்களுக்கான வரலாற்றுத் தருணம்!

உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். 'ஓப்பன்ஹைமர்' (Oppenheimer) படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, அவர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் 'தி ஒ... மேலும் பார்க்க

வானத்திலிருந்து குதித்தவர்கள் போல அலட்டிக்கொள்ளவில்லை! - ஷூட்டிங்கில் வியக்கவைத்த விஜய்யின் எளிமை!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் முகம் தேவையில்லை! - சாத்தூரிலிருந்து ஒரு ரசிகரின் பிறந்தநாள் மடல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணியின் எவர்கிரீன் நினைவலை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஒரே நாளில் 3 முறை பார்த்த 'கில்லி' மேஜிக்... இன்றும் பத்திரமாக இருக்கும் சிடி கேசட்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க