செய்திகள் :

கேரளம்: ஆண் நண்பருடன் சென்று வந்த மனைவியை கொலைசெய்த கணவன் - சோகத்தில் முடிந்த காதல் திருமணம்

post image

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(46). வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஹசீனா(38). வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இருவரும் 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அம்ரிதா சுரேஷ் (18), ஆனந்த் (17), ரோஷன் (11), அனயா (9) ஆகிய 4 பிள்ளைகள் உள்ளனர்.

திருவனந்தபுரம் நாலாஞ்சிறா உதியன்னூர் கோவில் அருகே கீர்த்திநகரில் லீசுக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். நேற்று வீட்டின் தரைத்தளத்தில் இருந்த பிள்ளைகளுக்கு, முதல் மாடியில் இருந்து தாய் ஹசீனா பீவி-யின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. பிள்ளைகள் மாடியில் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் ஹசீனா பீவி கழுத்து அறுபட்ட நிலையில், இறந்துகிடந்தார்.

தந்தை சுரேஷ் தாயை கொலை செய்துவிட்டு, கொலைக்குப் பயன்படுத்திய கத்தியைக் குளியலறை குழாயில் கழுவி, படுக்கையறையில் வைத்த பிறகு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பின்னர் காரில் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதுபற்றி மூத்த மகள் அம்ரிதா சுரேஷ் காவல் நிலையத்திற்கு போன் செய்து, "அம்மாவை அப்பா கொலை செய்துவிட்டார்" என தகவல் தெரிவித்துள்ளார்.

போலீஸார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது. தாயின் உயிரற்ற உடலைக் கண்டு பிள்ளைகள் கதறி அழுதது, அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

ஹசீனா கொலை குறித்து போலீஸ் விசாரணை

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், சி.சி.டி.வி காட்சிகளையும், மொபைல் டவர் இருப்பிடத்தையும் மையமாகக் கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "ஹசீனாவிற்கு வேறொரு ஆண் நண்பருடன் பழக்கம் இருப்பதாகக் கூறி சுரேஷ் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார். பிரச்சனை முற்றியதால், ஹசீனா தனது நண்பருடன் கடந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். மூன்று நாட்களுக்குப்பின் கடந்த திங்கள்கிழமைதான் அவர் வீட்டுக்குத் திரும்பி வந்தார். இதனால் இருவருக்குமான பிரச்சனை முற்றியது.

கொலைச்செய்யப்பட்ட ஹசீனா, தலைமறைவான சுரேஷ்

குடும்ப பிரச்னை குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை மண்ணந்தலா காவல் நிலையத்தில் ஹசீனா புகார் அளித்தார். காவல் நிலையத்தில் சுரேஷ் மற்று ஹசீனாவை அழைத்து சமரசம் செய்த நிலையில்  அவர் வீட்டிற்கு சென்றார். செவ்வாய்க்கிழமை இரவில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அது நேற்று அதிகாலை வரை நீடித்தது. இதற்கிடையில் ஹசீனாவும் சுரேஷும் மேல் மாடியில் உள்ள படுக்கையறைக்குச் சென்றபின்னரும் வாக்குவாதம் தொடர்ந்ததால் அது கொலையில். முடிந்துள்ளது" என்றனர்.

91 காயங்களுடன் சிதைந்த பிஞ்சு உடல்: கேரளாவை உலுக்கிய படுகொலை - தாயின் காதலன் வெறிச்செயல்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தை, தாயின் காதலனால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலில் 91 காயங்கள் இருந்ததாக பிரேத... மேலும் பார்க்க

மீன் தொட்டியைச் சுத்தம் செய்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு; கோவை அருகே சோகம்

கோவை மாவட்டம் பேரூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரது மனைவி அங்கம்மாள். இவர்களது மகன் விஷ்வா (13) எட்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, சுண்டாக்காமுத்தூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ... மேலும் பார்க்க

கொழுக்குமலையில் 400 அடி பள்ளத்தாக்கில் குதித்து இளைஞர் தற்கொலை; காதல் தோல்வி காரணமா?

வேலூர் மாவட்டம் காட்பாடி தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன், அவருடைய மகன் பரத் (வயது 21). இவர் சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகக் கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.விடுமுறைக... மேலும் பார்க்க

தி.மலை: பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் அட்டூழியம்; பணம் பறிப்பு - 8 பேர் கும்பல் சிக்கிய பின்னணி

வைகாசி மாத பௌர்ணமி கடந்த 30-ம் தேதி தொடங்கி, மறுநாள் மதியம் நிறைவடைந்தது. 30-ம் தேதி இரவு, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண், தன் நண்பர்களுடன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவிட்டு, இருசக்... மேலும் பார்க்க

'தோழியை சந்திக்க வந்த இடத்தில்.!' கோயம்பேடு தனியார் பார் தகராறு; மற்றொரு பெண்ணும் உயிரிழப்பு

கடந்த மே 31-ம் தேதி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில், நடனமாடும் போது இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் மற்றும் அவரது தோழிகளுக்கும், சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களுக்கும் பிரச்னை ஏற்ப... மேலும் பார்க்க

சாலையோரம் நிறுத்தியிருந்த காரை இரும்பு வியாபாரிக்கு விற்ற இளைஞர்; அதிர்ச்சியடைந்த உரிமையாளர்!

கேரள மாநிலம் ​மலப்புரம் மாவட்டம் வட்டம்குளம் பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவருக்குச் சொந்தமான கார் பழுதடைந்த காரணத்தால், பல ஆண்டுகளாக அவரது வீட்டின் முன்புறம் சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தார். ஆ... மேலும் பார்க்க