செய்திகள் :

பீகார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அதிகாலையில் தீ விபத்து: 4 நோயாளிகள் உயிரிழப்பு

post image

டெல்லியில் நேற்று ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பீகார் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பீகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 நோயாளிகள் உயிரிழந்தனர்.

முசாபர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசாத் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு நோயாளிகள் உறங்கிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட இத்தீவிபத்தால் மருத்துவமனையில் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு துறையினர் 3.55 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். தீப்பிடித்துக்கொண்ட தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

அவர்களில் சிலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,''நாங்கள் 15-20 நோயாளிகளை ஐசியூவில் இருந்து மீட்டோம், அதில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். மற்ற நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை குறித்து எங்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை"என்று கூறினார்.

இத்தீவிபத்தில் மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீவிபத்தில் இருந்து மீட்கப்ப்பட்ட 13 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட நீதிபதி சுப்ரத் குமார் தெரிவித்தார். ஆரம்பக்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

`அதிக நாள் இருக்க மாட்டார்' - மூத்தவருடன் நேரம் செலவிட வந்து, டெல்லி தீ விபத்தில் பலியான 8 பேர்

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள மால்வியா நகரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று திடீரென தீப்பிடித்துக்கொண்டதில் 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களில் அதிகமானோர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர். இந்த தீவ... மேலும் பார்க்க

பள்ளிக்கரணையில் பயங்கர தீ: காவல்துறையினர் பறிமுதல் செய்த வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தீ விபத்து!

சென்னை பள்ளிக்கரணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எங்கு? பள்ளிக்கரணையில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது... மேலும் பார்க்க

ஹெலிகாப்டர் விபத்து: `6 மணி நேரம் என் மார்பில் கிடந்தார்'- திருமணமான சில மணி நேரத்தில் பலியான மணமகன்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில், திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணமகன் மற்றும் ஹெலிகாப்டர் பைலட் ஆகிய இருவர் பரிதாபமாக உய... மேலும் பார்க்க

மியான்மரை அதிர வைத்த வெடிவிபத்து: கட்டடம் தரைமட்டமாகி குழந்தைகள் உட்பட 45 பேர் பரிதாப பலி!

மியான்மர் நாட்டின் எல்லையோரக் கிராமம் ஒன்றில் உள்ள ஒரு பெரிய கட்டடத்தில், திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து ஒட்டுமொத்த உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுரங்க வேலைகளுக்காக அந்தப் பெரிய கட்டடத்திற்குள்... மேலும் பார்க்க

கேரளம்: பொழுதுபோக்கு பூங்கா ராட்டின விபத்து; காயம் அடைந்தவர்கள் குப்பை எடுக்கும் வாகனத்தில் மீட்பு?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெம்பாயம் பகுதியில் ஹேப்பிலேண்ட் கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு விடுமுறையில் ராட்டினங்கள் உள்ளிட்டவற்றில் பொழுதுபோக்கவும் கேரளம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்... மேலும் பார்க்க

புனே: லிப்ட் கதவில் 1.5 மணி நேரம் சிக்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சின்காட் ரோடு பகுதியில் உள்ள ரித்தி சித்தி குடியிருப்பு கட்டிடத்தில் சைலேஷ்(7) என்ற சிறுவன் தனது பெற்றோடு வசித்து வந்தான். அவன் கட்டிடத்திற்குக் கீழே வந்து தனது நண்பர... மேலும் பார்க்க