செய்திகள் :

கேரளம்: பொழுதுபோக்கு பூங்கா ராட்டின விபத்து; காயம் அடைந்தவர்கள் குப்பை எடுக்கும் வாகனத்தில் மீட்பு?

post image

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெம்பாயம் பகுதியில் ஹேப்பிலேண்ட் கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு விடுமுறையில் ராட்டினங்கள் உள்ளிட்டவற்றில் பொழுதுபோக்கவும் கேரளம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.

இன்று கேளிக்கை பூங்காவிற்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்த ராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருந்தனர். அந்த ராட்டினத்தில் 26 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். அந்தச் சமயத்தில் திடீரென ராட்டினம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

ராட்டினத்தின் அடிப்பகுதியில் உள்ள வெல்டிங் இணைப்புகள் துருபிடித்த நிலையில் உறுதியிழந்து இருந்ததால் அது முறிந்து விழுந்துள்ளதாகத் தெரியவந்தது. ராட்டினம் உடைந்துவிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி இருந்தது.

அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டு, காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த 2 பெண்கள் 3 குழந்தைகள் என 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் நாகர்கோயிலைச் சேர்ந்த மனோரதி (54), சீமணி (49), மாலினி (49), ஷியாம் டேனியல் (14) மற்றும் ரோஸ் (16) எனவும், அவர்கள் ஒரே குடும்ப உறுப்பினர்கள் எனத் தெரியவந்துள்ளது. 

பொழுதுபோக்கு பூங்கா விபத்து
பொழுதுபோக்கு பூங்கா விபத்து

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹேப்பிலேண்ட் விபத்து தொடர்பாக வெஞ்ஞாறமூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால், உரிமத்தை மறுபரிசீலனை செய்யும் பொறுப்பு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கே உரியது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பி.சி.விஷ்ணுநாத் கருத்து தெரிவித்துள்ளார்.​

விபத்தைத் தொடர்ந்து, பொழுதுபோக்கு பூங்காவின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விபத்து காட்சி
விபத்து காட்சி

இதற்கிடையே உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைக்காததால் குப்பை எடுத்துச்செல்லும் வாகனத்தில் காயம் அடைந்தவர்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

மேலும், பூங்காவில் முறையான பராமரிப்பு இல்லாததே விபத்துக்குக் காரணம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வழக்கறிஞர் பிந்து கிருஷ்ணா கூறுகையில், "பூங்கா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முறையான ஆய்வும் நடவடிக்கையும் எடுக்கப்படும். பாதுகாப்புப் பிரச்னை காரணமாக அது உடைந்து விழுந்ததா எனவும், தேவையான தூரம் பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வுசெய்வதுடன், சான்றிதழும் சரிபார்க்கப்படும்" என்றார்.

புனே: லிப்ட் கதவில் 1.5 மணி நேரம் சிக்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சின்காட் ரோடு பகுதியில் உள்ள ரித்தி சித்தி குடியிருப்பு கட்டிடத்தில் சைலேஷ்(7) என்ற சிறுவன் தனது பெற்றோடு வசித்து வந்தான். அவன் கட்டிடத்திற்குக் கீழே வந்து தனது நண்பர... மேலும் பார்க்க

மும்பை: ஒரு கி.மீ. தூரத்தைக் குறைக்க குறுக்கு வழி; லாரி மீது கண்டெய்னர் மோதி 13 பேர் பலி

மும்பை அருகில் உள்ள தகானு தனிவாரி என்ற இடத்தில் லாரி ஒன்று திருமணத்திற்காக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் 50 பேர் இருந்தனர். மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்... மேலும் பார்க்க

ஈரோடு: குடும்பத்துடன் குளிக்கச் சென்ற இடத்தில் சோகம் - பரிதாபமாக பறிபோன 3 உயிர்கள்

நாமக்கல் மாவட்டம் அவிநாசி பட்டியைச் சேர்ந்த தறிப்பட்டைறை தொழிலாளியான பெருமாள், மனைவி, குழந்தைகளுடன் பரமத்தி வேலூர் சித்தம்பூண்டிக்குச் சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குடும்பமாகச... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து: பயணிகள் வெளியேற்றம்; என்ன நடந்தது?

முற்றிலும் ஏ.சி.பெட்டிகளைக் கொண்ட ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நாட்டின் தலைநகரில் இருந்து மாநிலத் தலைநகரங்களுக்கு இயக்கப்படுகிறது. நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நிஜாமுதினுக்கு... மேலும் பார்க்க

பிரபல ரெளடி பிறந்தநாளுக்காக நண்பர்களுக்கு வைத்த மது விருந்து பார்ட்டி - விபத்தில் 2 பேர் பலி!

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மன்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தளபதி(36). திருவையாறு, நடுக்காவேரி காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்கள் திருடி வந்த... மேலும் பார்க்க

ஆட்டுக்குட்டியை மீட்க முயன்று கிணற்றில் விழுந்த சிறுமி - செல்போன் சிக்னலை வைத்து மீட்ட காவல்துறை

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் தனுசியா (14). இவர், மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு சேர்ந்துள்ளார். இந்நிலைய... மேலும் பார்க்க