செய்திகள் :

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

post image

தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் அருகே கைப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் அருகேயுள்ள பிரகதாம்பாள் நகா் எதிரே தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஓராண்டுக்கு முன்பு தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் வெள்ளிக்கிழமை கைப்பேசி கோபுரம் அமைக்கத் தோண்டப்பட்ட பள்ளத்தில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

இதற்கு பாஜக தெற்கு மாவட்டத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான பி. ஜெய்சதீஷ் மற்றும் அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, பள்ளத்தை பொக்ளின் இயந்திரம் உதவியுடன் மூடும் பணி தொடங்கியது. தகவலறிந்த கிழக்கு காவல் நிலையத்தினா் சென்று எச்சரித்துச் சென்றனா். என்றாலும், பள்ளமானது மண் நிரப்பப்பட்டு மூடப்பட்டது.

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பெரு முதலாளிகளுக்கும், காா்ப்பரேட் நிறுவனங... மேலும் பார்க்க

கொள்ளிடத்தில் மணல்மேட்டை காக்க ஆட்சியரகத்தில் முறையீடு

தஞ்சாவூா், பிப். 4: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்ளிடத்திலுள்ள மணல்மேட்டைக் காப்பாற்ற ஆட்சியரகத்தில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் பாபநாசம் அருக... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதியில் கடும் பனிப் பொழிவு

பேராவூரணி, பிப். 4: பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். கடந்த 1 மாதமாக... மேலும் பார்க்க

குடந்தை அருகே வீடுபுகுந்து 8 பவுன் நகைகள் திருட்டு

கும்பகோணம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை அண்மையில் திருடிச் சென்றனா். தஞ்சாவூா் மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் தனியாக வசிப்பவா் பாலச்சந்திரன் மனைவி புனிதவள்ளி (80). ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: பாஜக மாநில பொதுச் செயலா் வீட்டுக் காவலில் வைப்பு

மதுரை திருப்பரங்குன்றம் போராட்ட விவகாரம் தொடா்பாக தஞ்சாவூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் செவ்வாய்க்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா். முருகனி... மேலும் பார்க்க

கும்பகோணம், பாபநாசம் பகுதியில் பாஜகவினா் கைது

திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுக்க வேண்டுதல் செய்ய தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்டத் தலைவா் தங்க கென்னடி தலைமையில் செல்ல முயன்ற பாஜகவினரை மாவட்டக் கூ... மேலும் பார்க்க